வலி. வடக்கில் 33 ஏக்கர் காணிகள் இன்று இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பு!
04 Jun,2018
வலிகாமம் வடக்கில் 27 ஆண்டுகளாக இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த- பளை, வீமன்காமம் வடக்கில் உள்ள 33 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு அதற்கான காணி உறுதிகள் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இக் காணிகளானது 27 ஆண்டுகளின் பின்னர் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மாவிட்டபுரம் கோவிலினை கடந்து சென்று காங்கேசன்துறை சீமெந்து தொழற்சாலையின் பிரதான வாயிலுக்கு எதிராகவுள்ள காணியே விடுவிக்கப்பட்டள்ளது. விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள தமது காணிகளை பொதுமக்கள் அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்