புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்தார்கள்?
12 Mar,2018
தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை உள்பட உலகம் முழுவதும் செயற்பட்ட விதம் சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை இங்கிலாந்திலுள்ள இலங்கைப் பேரவை, அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டோபியஸ் எல்வூட்டின் நேற்றுக் கையளித்துள்ளது.
லண்டனில் வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து இந்த அறிக்கையை கையளித்துள்ளனர். பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு ஏற்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் பிரிட்டனில் வாழும் சிங்களவர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தாகவும் இலங்கைப் பேரவை கூறியுள்ளது.
இலங்கைப் பேரவையின் இணைத் தலைவர் இந்திக குணசேகர, செயலாளர் மெனிக் மாலியத்த, குழு உறுப்பினர் மெண்டிஸ் ஆகியோர் இந்த அறிக்கையை கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.