வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாா் பாா்வதி அன்னையின் 7 ஆண்டு நினைவு நாள்
20 Feb,2018
2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இன்றைய நாளில் அவா் இறவனடி சோ்ந்தாா். வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள் பார்வதி.
16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார்.
இவா்களுக்கு நான்கு பிள்ளைகள்.மூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி மற்றும் தேசியத் தலைவர் பிரபாகரன்.
தமிழினத்தின் விடிவிற்காய் ஒரு தலைவனை ஈன்றெடுத்த அன்னை, ஈழத்தாய் பாா்வதி அம்மாள் 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள்.
மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, பிரபாகரனின் தந்தை நான் என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். நான்தான் அவர் அன்னை என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி.
அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே இராணுவம் கொண்டுபோய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. முதலில் வேலுப்பிள்ளை மரணித்தார். அடுத்ததாக, அன்னை பாா்வதியும் 2011 ஆம் ஆண்டு இதேநோளில் மரணித்தாா்