தமிழா் தாயக பிரதேசத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நிகழ்வு!
14 Dec,2017
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தின் 1 1 ம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழா் தயாக பகுதிகளில் நினைவுகூரப்பட்டது.
முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு கைவேலியில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைமையகத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தின் 1 1 ம் ஆண்டு நினைவு நினைவுகூரப்பட்டது.
தமிழா் தாயக பிரதேசத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு நிகழ்வு!
இன்று (14)மாலை 4 மணியளவில் சுடரேற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் நினைவுரைகளும் இடம்பெற்றது.
இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 அவது ஆண்டு நினைவுநாள் நினைவுகூரப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் பசுந்தமிழன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.