மோடியின் தலைமையிலான அரசுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை கிடையாது

05 Dec,2017
 

 
 
இலங்­கை­யின் தலைமை அமைச்சரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரு­டன் பல்­வேறு விட­யங்­கள் தொடர்­பாக விரி­வான பேச்­சுக்­களை நடத்­தி­யுள்­ளார். இதன்போது இந்­தி­யத் தரப்­பி­லி­ருந்து இலங்­கைக்கு உத­வி­கள் வழங்­கு­வது தொடர்­பாக சாதக மான சமிக்­ஞை­கள் காட்­டப்­பட்­டுள்ளன.
 
இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் எந்த விட­யத்தை­ எடுத்­துக்­கொண்­டா­லும் சொந்­தக் காலில் நிற்­கக்­கூ­டிய வல்­ல­மை­யை அது கொண்­டி ­ருக்­க­வில்லை என்­பது தெரிந்த விட­ய­ம் தான்.
 
பிற நாடு­க­ளி­டம் கடன்­பெற்றோ அல்­லது உத­வி­களைப் பெற்றோதான் தனது தேவை­களை நிறைவு செய்து கொள்­வ­தை இந்த நாடு வழக்­க­மா­க்கிக் கொண்­டுள்­ளது.தற்­போது வெளி நாடுகளிடமிருந்து அள­வுக்கு மீறிப் பெற்­றுக்­கொண்ட கடன்­க­ளைத் திருப்­பிச் செ­லுத்­து­வ­தில் அதிக சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றது.
 
மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் சீனா அதிக வட்­டிக்கு பெரும் தொகை­யான கடன்­களை இலங்கைக்கு வழங்­கி­யது. கேள்வி கேட்­ப­தற்கு எவ­ரு­மில்­லாத நிலை­யில் மகிந்த தலை­மை­யி­லான அரசு அவற்­றைச்­செ­ல­விட்­டது. நாட்­டுக்­குத் தற்­போது பெரும் சுமை­க­ளாக மாறி­யுள்ள அம்­பாந்­தோட்­டைத் துறை­மு­கம்,மத்தள வானூர்தி நிலை­யம் ஆகி­ய­வை பெ­ரும் தொகை­யான நிதி­யைச் செல­விட்டு அமைக்­கப்­பட்ட போதி­லும், அவை பயன்­ப­டாத நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன.
 
ஆனால் அவற்­றுக்கு செல­வி­டப்­பட்ட கடன்­தொகை வட்­டி­யு­டன் சேர்ந்து நாட்டு மக்­க­ளின் தலையை நெரித்து வரு­கின்­றது. ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள் விடு­கின்ற தவ­று­கள் இறு­தி­யில் நாட்டு மக்­க­ளையே பாதித்து விடு­கின்­றன.
 
 
 

 
 
மோடியின் தலைமையிலான அரசுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை கிடையாது
 
இலங்­கை­யைப் பொறுத்த வரை­யில் சீனா­வு­ட­னும், இந்­தி­யா­வு­ட­னும் உற­வைக்­கொண்­டி­ருக்­கவே அந்த நாடு விரும்பு­கின்­றது. தனது பொரு­ளா­தார தளம்பல் நிலையை சமாளிக்க வேண்­டு­மென்­றால் இதைத்­த­விர வேறு வழி­யொன்­றும் இந்த நாட்­டுக்கு இல்லை. இலங்கை கேந்­திர முக்­கி­யத்­து­வம் மிக்­க­தொரு இடத்­தில் அமைந்­துள்­ள­தால், இந்­தியா மற்­றும் சீனா ஆகிய நாடு­கள் இலங்கையு டன் சுமூக உறவு கொண்­டி­ருக்­கவே விரும்­பு­கின்­றன.
 
இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி­ யு­ட­னான சந்­திப்­பின்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க இலங்­கைத் தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சினை தொடர்­பா­கக் கதைத்­தாரா என்­பது குறித்து எதுவும் தெரி­ய­வில்லை. அவ்­வாறு கதைத்­த­தற்­கான அறி­கு­றி­யும் தென்­ப­ட­வில்லை. மோடி கூட அனைத்து வழி­க­ளி­லும் இந்­தியா இலங்­கைக்கு உத­வு­மென்ற உறு­தி­மொ­ழியை வழங்­கி­னாரே தவிர, தமி­ழர்­கள் தொடர்­பாக வாயைத் திறக்­க­வே­யில்லை.
 
இந்­தி­யத்­த­லைமை அமைச்­சர் தாம் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்தபோது தமி­ ழர்­கள் தொடர்­பாக வழங்­கிய வாக்­கு­றுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
 இந்­தி­ரா­காந்தி அம்­மை­யா­ரின் மறை­வுக்­குப்­பின்­னர் ஈழத் தமி­ழர்­கள் தொடர்­பான இந்­தி­யா­வின் கொள்­கை­ நிலைப்பாட்டில் பெரும் மாற்­றம் ஏற்­பட்­டு­விட்­டது. அம்­மை­யார் ஈழத் தமி­ழர்­கள் மீது நிறை­யவே அனு­தா­ப­முள்­ள­வ­ரா­கத் திகழ்ந்­தார்.
 
1983 ஆம் ஆண்டு இடம் பெற்ற இனக்­க­ல­வ­ரத்­தில் தமி­ழர்­கள் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­ட­னர். இதை­ய­றிந்த அம்­மை­யார் இந்­தி­யா­வின் அயலுறவுத்துறை அமைச்­ச­ரா­க­
 வி­ருந்த பி.வி.நர­சிம்மராவை இலங்­கைக்கு அனுப்பி வைத்­தார். அவ­ரது வருகை கல­வ­ரத்தைத் தணிப்­ப­தற்­குப் பெரி­தும் உத­வி­யது.
 
 
 

 
 
தமிழ் இளைஞர்களது ஆயுதப் போராட்ட முயற்சிக்கு ஆதரவளித்த இந்திராகாந்தி
 
இலங்கையின் சிங்கள அரசுகள் தமி­ழர்­க­ளுக்கு எது­வுமே செய்­யா என்­பதை நன்­கு­ணர்ந்து கொண்ட இந்­தி­ர­காந்தி அம்­மை­யார் தமிழ் இளை­ஞர்­க­ளுக்­குப் ஆயுதப் ப­யிற்­சி­களை இந்­தி­யா­வில் வைத்து வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டார்.இந்த இளை­ஞர்­களே இலங்­கை­யில் ஆயு­தப் போராட்­டத்தை ஆரம்­பித்து நடத்­தி­னார்­கள்.
 
ஆனால் அம்­மை­யா­ரின் அகால மறை­வுக்கு பின்­னர் ஆட்­சி்க்கு வந்த அவ­ரது புதல்­வ­ரான ராஜிவ்­காந்தி இலங்கை அர­சுக்­குச் சார்­பான கொள்­கை­க­ளையே கொண்­டி­ருந்­தார். எந்­த­வி­த­மான சட்ட வலு­வும் இல்­லாத ஒப்­பந்­தம் ஒன்றை இலங்கை அர­சு­டன் இவர் செய்து கொண்­டார். இதன் மூல­மாக வடக்­கும் கிழக்­கும் இணைக்­கப்­பட்­ட­தா­கப் பெரி­தா­கக் கூறப்­பட்ட போதி­லும் நீதி­மன்­றத் தீப்­பொன்­றின் பிர­கா­ரம் அந்த இணைப்பு இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டது.
 
விடு­த­ லைப் புலி­களை குறுகிய காலத்துள் ஒழித்­து­வி­டு­வது என்ற நோக்­கோடு இங்கு அனுப்பி வைக்­கப்­பட்ட அமை­திப்­படை என்ற பெயர் தாங்­கிய இந்­தி­யப்­ப­டை­கள் தமி­ழர்­க­ளுக்­குச் செய்த அட்­டூ­ழி­யங்­கள் வர­லாற்­றில் மறக்க முடி­யா­தவை. இறு­தி­யில் தமது நோக்கத்தில் தோல்வி யுற்று தாய் நாட்­டுக்­கு வெறும் கையு டன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை இந்தியப் படைகளுக்கு ஏற்பட்டது. பெரும் உயி­ரி­ழப்­புக்­க­ளை­யும் அவை எதிர்­கொண்­டன. ராஜிவ் காந்­தி­யின் படு­கொ­லை­யின் பின்­னர் ஈழத்­த­மி­ழர்­கள் மீதான அனு­தா­பம் இந்­திய அர­சி­ட­மி­ருந்து முற்­றா­கவே மாறிவிட்டது.
 
 
 

 
 
இறுதிப் போரில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு உதவிய இந்தியா
 
இறு­திப்­போ­ரின்­போது இந்­தியா இலங்­கை அரசுக்கு சகல வகை­யி­லும் உத­வி­யது. புலி­களை முற்­றாக அழிக்க வேண்­டும் என்ற எண்­ணமே அந்த நாட்­டி­டம் நிறைந்து காணப்­பட்­டது. தமிழ்­மக்­க­ளைப் பற்­றிய சிந்­தனை சிறிதுகூட அத­னி­டம் காணப்­ப­ட­வில்லை. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­டமை கூட இந்­தி­யா­வின் மனச்­சாட்­சியை உலுப்­ப­வில்லை.
 
ஆனால் இலங்கை அர­சுக்கான அதனது ஆத­ரவு தொட­ரத்­தான் செய்­கின்­றது. சீனா இலங்­கை­யில் கால் பதிப்­பதை விரும்­பாத இந்­தியா இலங்­கையை அர­வ­ணைத்­துச் செல்­வ­தில் ஆர்­வம் காட்டி வரு­கின்­றது.
 இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி­ யும் ஈழத்­த­மி­ழர்­க­ளைக் கைவிட்டு விட்­டார் என்­று­தான் கூற வேண்­டும். அவர் இலங்­கைக்கு வருகை தந்த போது கூறிய வார்த்­தை­களையும் அவர் மறந்து விட்­டார்.
 
ஈழத்­த­மி­ழர்­கள் இலவு காத்த கிளி­யின் நிலை­யில்­தான் தற்­போது உள்­ள­னர். தமது பிரச்­சி­னை­க­ளுக்­கெல் லாம் தீர்வு கிடைக்­கு­மென்ற அவர்­க­ளது நம்­பிக்கை நிறை­வே­றுமா என்­பது சந்­தே­கமாகவே உள்ளது. இவர்­கள் இனி­யும் இந்­தி­யாவை நம்­பி­யி­ருப்­ப­தில் பய­னொன்­றும் கிடைக்காது. ஏனென்­றால் தீர்­வுக்­கான ஒளிக்­கீற்றை வெகு தூ­ரத்­தில் கூட காண முடி­ய­வில்லை.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies