யாழில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் மரணம்! வைத்தியசாலையில் பதற்றம்
22 Oct,2017
யாழ். அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சற்றுமுன்னர் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் பா. சத்திய மூர்த்தி உறுதி செய்துள்ளார்.
இன்று பிற்பகல் உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தற்போது யாழ்.போதனா வைத்தியசாலை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.