இலங்கையர்களுக்கு, பிரித்தானியாவில் தொழில்வாய்ப்பு !
15 Oct,2017
பிரித்தானியாவில் ஏற்படவுள்ள தாதியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதற்காக, இலங்கையில் இருந்து ஆட்களை பெறும் வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியுள்ளது. இந்த நிலையில் அங்கு 2018 இல் 42,000 தாதியருக்கு வெற்றிடம் ஏற்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த வெற்றிடங்களை இலங்கையர்களை கொண்டு நிரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்கீழ் இலங்கையில் உள்ள பிரிட்டிஸ் கவுன்ஸில் பரீட்சைகளுக்கு தோற்றி தகமைகளுடன் ஆண், பெண் தாதியர்கள் இந்த துறைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.