சம்பந்தனை வீழ்த்த திட்டம்
08 Oct,2017
இரா.சம்பந்தன தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்துவதற்கு புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி, ரெலோவில் இருந்து பிரிந்த சிறிரெலோ அணி ஆகியவற்றுடன், ஈ.பி.டி.பி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.