ஐ.நா. அமர்வில் பங்குபற்ற மாட்டேன்: சி.வி
13 Feb,2014
ஐ.நா. அமர்வில் பங்குபற்ற மாட்டேன்: சி.வி
ஐ.நா அமர்வில் பங்குபற்ற மாட்டேன் என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை வருகைதந்த இலங்கைக்கான நோர்வே நாட்டின் தூதுவர் கிரேட் லொச்சன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பினையடுத்து கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவிக்கையில்,
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் தெரிவிக்கையில், அங்கு நடைபெறுவது நிர்வாகம் சம்பந்தமான கூட்டமல்ல. மனித உரிமைகள் சம்பந்தமான கூட்டம். அத்தோட அரசியல் ரீதியான விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்த்துக்கொள்வார்கள். எனவே அந்தக்கூட்டத்தொடரில் பங்குபற்றும் எண்ணமில்லையென முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.