நோர்வேயிலிருந்து வந்தவர் கிணற்றில் விழுந்து மரணம்- (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக
22 Nov,2025
கால் இடறி கிணற்றில் தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் ஆனைக்கோட்டை – ஆறுகால் மடம் பகுதியில் நேற்று இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஆறுகால்மடத்தை சேர்ந்த சின்னத்துரை ராஜ்வத னன் (வயது40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நேர்வேயில் வசித்துவந்த நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்ததா கவும், நேற்று காலை உணவு அருந்திவிட்டு கை கழுவுவதற் காக கிணற்றடிக்கு
.சென்றவேளை கால் தவறி கிணற்றினுள் விழுந்து உயி ரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடுவதற்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று காலை சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.