பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றனர் -

21 Nov,2025
 

 
 
 
திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரை விவகாரத்தை  பயன்படுத்திக்கொண்டு பாராளுமன்றத்தில்  உள்ள எதிர்க் கட்சி உறுப்பினர்கள் சிலர் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றனர். இந்த இனவாதிகளின் கூச்சலுக்கு எடுபடாமல் அமைதி காத்து வரும் திருகோணமலை வாழ் சிங்கள, தமிழ் மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்.பி. எஸ். குகதாசன் தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21)  இடம் பெற்ற   2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில்   கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும்  சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும்  கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும்  கடல் வளங்கள்  அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும்  உரையாற்றுகையில்,
 
திருகோணமலை மாநகர  மணிக் கூட்டு கோபுரத்தில் இருந்து பிரட்றிக் கோட்டை வாசலுக்கு செல்லும் சாலையை முகவரியாகக் கொண்டு;  1957 ஆம் ஆண்டில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதி வர்த்தன சமிதிய என்னும் ஓர் அறக்கட்டளை பதியப்பட்டுள்ளது.
 
இது  2003 ஆம் ஆண்டில் ஒரு தர்ம பள்ளி நடத்தும் நிலையமாக மாற்றம் பெற்றுள்ளது. அத்தோடு இது 2010 ஆம் ஆண்டில் ஒரு புத்த  விகாரையாகவும்  பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
பதிவு செய்யப்பட்ட வேளையில்   இது  1951 ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.இந்த இடம் இப்பொழுது சங்கமித்தை விகாரை என்றும் அழைக்கப் படுகின்றது.இது முதலாவது இடமாகும்.
 
இது இவ்வாறு இருக்க ,  டொக்யாட் வீதியில் இருந்து பிரட்றிக் கோட்டை வாசலுக்கு செல்லும் சாலையில் மேற்படி ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதி வர்த்தன சமிதிய அமைப்பின் விண்ணப்பத்தின் பேரில் 40  பேர்ச் பரப்பளவு  உள்ள வேறு ஒரு காணி அன்றைய ஜனாதிபதி  மஹிந்த  ராஜபக்ஷ்வால்  2008 ஆம் ஆண்டு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
 
மேற்குறித்த  காணிக்கு 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  9 ஆம் திகதி அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால்    நீண்ட கால குத்தகையை  மாற்றி  உறுதி வழங்கப்பட்டுள்ளது . இது இரண்டாவது இடமாகும்.
 
மேற்படி இந்த இரண்டு இடங்களும் வெவ்வேறானவை. இப்பொழுது இவை இரண்டும் ஒன்று எனக் குழப்பப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு குத்தகைக்கு பெற்ற காணியில் , எவ்வாறு 2003 ஆம் ஆண்டு தர்மப் பள்ளி பதியப்பட்டு நடத்தி வர முடியும் என்பதனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
 
இந்தக் காணியை 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம்  திகதி அளவீடு செய்த நில அளவைத் திணைக்களமானது குறிப்பிட்ட காணி  கடலோர ஒதுக்குப் பகுதி என்றும் இது  எதுவித கட்டடமும் அமைக்கப் பட முடியாத வலயம்  என்றும் குறிப்பிடுகின்றது. அவ்வாறு இருக்கையில் எவ்வாறு அதனுள் கட்டடம் அமைக்கலாம் என்ற கேள்வி எழுகின்றது.
 
மேலும் நில அளவைத் திணைக்களம் தனது குறிப்பில் இக் காணிக்கு வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று பக்கமும் கடற்கரை என்றும் மேற்கில் கோட்டைக்குச் செல்லும் வீதி என்றும் சவுக்கு மரம் அமைந்துள்ள தோட்டம்  என்றும் குறிப்பிட்டுள்ளது.
 
எது எவ்வாறு இருப்பினும்  2004 ஆம் ஆண்டின் சுனாமிக்கு பிந்திய கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ சட்டத்திற்கு அமைய இரண்டாவதாக குறிப்பிட்ட அந்த இடத்தில் எந்தக் கட்டடத்தையும் கட்ட முடியாது .
 
 
அதாவது கடற்கரை ஓரத்தில் இருந்து 20 மீற்றருக்குள் எந்த கட்டடத்தையும் கட்ட,  சட்ட அனுமதி இல்லை என்பதனைக் கரையோர பாதுகாப்புச் சட்டம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.  
 
இருப்பினும் தற்போதைய இந்த கட்டடத்தை அதாவது தர்ம பள்ளியை   கரையோரத்தில் இருந்து 10 மீற்றர் தூரத்திற்குள்  அமைக்க முனைவது   இலங்கை சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல்.
 
இந்த இடத்தில் ஒரு  தர்மப் பள்ளி கட்டப்பட்டு நடத்தப்படும் பொழுது மீண்டும் ஒரு சுனாமிப் பேரலை ஏற்பட்டால் மாணவர்களின் நிலை என்ன என்பதனையும் நாம் அறிவியல் அடிப்படையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
இத்தகைய பேரிடர்  மீண்டும் ஏற்பட்டு மனித  உயிர்கள் காவு கொள்ளப் படாமல் இருக்க வேண்டுமென்றால்  இந்த இடத்தில் எவ்வித கட்டடமும் கட்டுவது பொருத்தமானது அல்ல என்பதனைத் தெரிவித்துக் கொண்டு , சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அரசும் நீதித் துறையும் ஆவன செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.
 
“ மதம் என்பது அபினைப்  போன்றது” என்று கார்ல்ஸ் மார்க்ஸ் கூறினார். இந்த பாராளுமன்றத்தில்  உள்ள எதிர்க் கட்சி உறுப்பினர் சிலரின் செயற் பாடுகளில் இருந்து இது உண்மை என்பதனை என்னால்  அறிந்து கொள்ள முடிகின்றது. 
 
 
மேலும் கார்ல்ஸ் மார்க்ஸ் ஒரு மனிதனுக்கு அகச்சூழல், புறச் சூழல் என்று இரண்டு காணப்படுகின்றது எனவும் சில மனிதர்கள் புறச்சூழலால் மாறி இருப்பவர் போல தோன்றினாலும்  அகச் சூழலால் மாறி இருக்க மாட்டார்கள் என்றார். அதுவும்  உண்மை என எதிர்க் கட்சி உறுப்பினர் சிலரின் செயற்பாடுகள்  எடுத்துக் காட்டுகின்றன.
 
அதாவது இவர்கள் இன,மத வாதம் அற்றவர்கள் போல காணப்பட்டாலும் அகச் சூழலால் மாற்றப் படாதவர்கள் ஆகவும்; உண்மையில் இன,மத, வாதத்தினை தூக்கி சுமப்பவர் ஆகவும் உள்ளனர்.
 
இவர்கள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றனர். இந்த இனவாதிகளின் கூச்சலுக்கு எடுபடாமல் அமைதி காத்து வரும் திருகோணமலை வாழ் சிங்கள, தமிழ் மக்களுக்கு எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.



Share this:

India

India

Malaysia

Srilanka

Srilanka

Vietnam

Srilanka

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies