நோர்வேயில் யாழைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
30 Jul,2025
நோர்வேயில் யாழைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் – பொலிகண்டியைச் சேர்ந்த 34 வயதுடைய சுகன்ஜா ஹரிகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்த பெண் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன் இவ்விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
நேற்றைய தினம் நோர்வேயில் குறித்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.