திருகோணமலை சம்பவத்தை யாரும் இனவாத, மதவாதமாக மாற்றவேண்டாம்

17 Nov,2025
 

 
 
 
திருகோணமலை சம்பவத்தை யாரும் இனவாத, மதவாதமாக மாற்றவேண்டாம். தற்போது அது  நீதிமன்ற நடவடிக்கையாகும். அதனால் நீதிமன்ற நடவடிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை என பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைசசு மற்றும் நீதி மற்றம் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 
 
நிறைவேற்றுத்துறை, நீதிமன்றம், பாராளுமன்றம் ஆகிய மூன்று  தூண்களும் சமநிலையாக செயற்படவேண்டும் என நாங்கள் படித்திருக்கிறோம். ஆனால் அது  செயற்பாட்டில் வரும் காலம் வரும்வரை  நாங்கள் பார்த்திருந்தாேம். ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதியின் கீழே  இந்த மூன்று துறைகளும் சமநிலையாக செயற்பட இடமளிக்கப்பட்டிருக்கிறது.  ஏனெனில் ஜேஆர், உயர்நீதிமன்ற நீதியர்களுக்கு கள் எறிந்தார். அவ்வாறு எந்த சம்பவமாவது இந்த அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கிறதா?
 
அதேபோன்று நாட்டில் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதில்லை என நாமல் ராஜபக்ஷ் எம்.பி. தெரிவிக்கிறார். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ்வின் காலத்தில் பசில்ராஜபக்ஷ்வின் வழக்கை கையாண்டுவந்த சட்டத்தரணியை உயர்நீதிமன்றத்துக்கு நியமித்தார். அதன்பி்ன்னர் திவிநெகும வழக்கில் பசில் ராஜபக்ஷ்வுக்கு சார்ப்பாக தீர்ப்பெழுதவில்லை என்பதறக்காக பிரதமர நீதியரசர் சிராணி பண்டார நாயக்கவை விரட்டினார்கள். அதன் பின்னர்  செலான் வங்கியின் தலைவரை உயர்நீதிமன்ற ஆசனத்தில்  அமர்த்தினார்கள்.இவர்கள்தான் இன்று நீதிமன்ற சுயாதினம் தொடர்பில் கதைக்கின்றனர்.
 
 
அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தை எவ்வாறு வழிநடத்தினார்கள், நீதிமன்ற சுயாதீனத்தன்மையை எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பது வரலாற்றில் எழுதப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபகஷ் காலத்தில் நீதிமன்றத்துக்கு எவ்வாறு அழுத்தம் பிரயோகிகப்பட்டிருக்கிறது,  என்பது தொடர்பில் எழுதப்பட்டிருக்கிறது.
 
ஆனால் இப்போதுதான நீதிமன்ற நடவடிக்கைகள் சுயாதீனமாக செயற்படுகின்றன. நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவே நடவடிக்கை எடுக்கிறது. அதில் யாருக்கு்ம் அழுத்தங்கள் கொடுக்க முடியாது. ஆனால் பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்திக்கொண்டு, பல விடயங்களையும் தெரிவிக்கின்றனர். ஆதனால், வெளியில் இடம்பெறும் ஒரு சம்பவத்தை பயன்படுத்திக்கொண்டு, சபையில் உரையாற்ற முடியாதவகையில் நிலையியற் கட்டளையில் திருத்தம் மேற்கொள்ள முடியுமானால், அதனை மேற்கொள்ள வேண்டும். சுயாதின நிறுவனங்கள், சுயாதீனமாக செயற்பட இடமளிக்கவேண்டும்.
 
 
திருகோணமலை சம்பவத்தை ஒருசிலர் இனவாதமாக்க முயற்சிக்கின்றனர். திருகோணமலையில் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை உண்மை. அதுதொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேநேரம் நீதிமன்றத்துக்கும் அறிவித்திருக்கிறது. தற்போது அது நீதிமன்ற நடவடிக்கையாகும். அதனால் அந்த நீதிமன்ற நடவடிக்கையில் நாங்கள் தலையிடுவதில்லை எனவே இந்த சம்பவத்தை இனவாத, மதவாதமாக மாற்ற வேண்டாம். அதேநேரம் நீதிமன்ற சுயாதீனத்தை உயர்ந்த மட்டத்தில் பாதுகாத்துவரும் அரசாங்கம், எமது அரசாங்கம் என்பதை பெருமையும் தெரிவிக்கிறேன் என்றார்.



Share this:

India

India

Malaysia

Srilanka

Srilanka

Vietnam

Srilanka

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies