டுபாய் வரை சென்று 3 சிங்கள குண்டர்களை கைது செய்த CID
                  
                     08 Feb,2025
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	இலங்கை பெலியட்டையில் ஐந்து பேரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொலிஸ் உதவி ஆய்வாளர் (SI) உட்பட இன்டர்போல் ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட மூன்று பிரபல குற்றவாளிகள் காலை (07) துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.
	 
	அதன்படி, 2024 இல் பெலியட்டையில் ஐந்து பேரின் கொலைக்காக தேடப்பட்ட ரன்முனி மஹேஷ் ஹேமந்த சில்வா, அக்குரேசையில் கொலைகளில் குற்றம் சாட்டப்பட்ட ‘ரோட்டும்பா உபாலி’ மற்றும் ‘கொல்லொன்னாவே சந்தன’ என்றழைக்கப்படும் பிரதீப் சந்தருவன் ஆகியோர் நாடு கடத்தப்பட்ட குற்றவாளிகளில் அடங்குவர் என்று இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
	 
	துபாயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் குழுவினர் இலங்கைக்கு அழைத்து வந்தனர். இலங்கை பொலிஸாரின் அறிவிப்பைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக இன்டர்போல் ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பித்தது.
	 
	சந்தேக நபர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றங்கள் குறித்த பின்வரும் விவரங்களை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்: