ஆனைத்து துப்பாக்கிகளையும் ஒப்படைத்தார் யோஷித்த
02 Feb,2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வாரன யோஷித்த ராஜபக்ஷ தனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் மீள ஒப்படைத்துள்ளார்.
பாதுகாப்பிற்காக அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் வழங்கப்படுவதின் கீழ் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்த அறிவித்தலையடுத்து அவரிடமிருந்த 7 துப்பாக்கிகளில் 5 துப்பாக்கிகளை ஆரம்பத்தில் ஒப்படைத்திருந்தார்.
இதன் பின்னர் மீண்டும் பாதுகாப்புச் செயலாளரால் ஏனைய துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்குமாறு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரிடம் இருந்த எஞ்சிய இரண்டு துப்பாக்கிகளும் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.