இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதே அனர்த்தங்களுக்கு வழிவகுக்கிறது ; அமைச்சர்

29 Jan,2025
 

 
 
இந்தியா மீனவர்கள் தமது கடற்பரப்பை  தாண்டி இலங்கை மீனவர்களின் கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவது அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்தொழில் நீர்வளத் துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
 
வடமராட்சிக் கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்  நுழைந்த இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட  சம்பவம் தொடர்பில் கருத்துத் தொரிவித்தபோதே அவர் இவ்வாறு  தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
இலங்கை இறைமையுள்ள நாடு அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.  இந்திய  மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு   எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றார்கள்.
 
இந் நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) காங்கேசன் துறைக்  கடற்பரப்பில் இந்தியா மீனவர்கள் அத்துமீறி வருகை தந்து  மீன்பிடியில்  ஈடுபட்டிருக்கிறார்கள்.
 
அவர்களை கைது செய்வதற்காக கடற்படையினர் சுற்றிவளைத்து அவர்களின் படகுக்குள் கடற்படையினர் ஏறியுள்ளனர்.
 
இவ்வாறு ஏறிய மீனவர்களை படகுடன் இழுத்துச் செல்வதற்கு இந்திய மீனவர்கள் தயாரானபோது கடற்படையினர் தடுத்து நிறுத்துவதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
 
இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம்  இன்று நேற்று உருவானது விடயம் அல்லை பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை.
 
இந்த பிரச்சனைக்கு எமது ஆட்சியில் தீர்வை காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனெனில் மக்களை  தொடர்ச்சியாக  கண்ணீர் விட வைக்க முடியாது.
 
நாங்கள் பலமுறை இந்திய மீனவர்களை தயவாகக் கேட்டுள்ளோம் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள் எமது மீன மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று.
 
அண்மையில் கூட நெடுந்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்திய இழுவைப்  படகுகள் அத்து மீறி உள் நுழைந்து அப்பகுதி மீனவர்களின் வலைகளை நாசப்படுத்தியதுடன் அவர்களை பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாக ஆக்குகின்றனர். 
 
நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாது உள்ளது என கூறுகிறார்கள். 
 
எமது மீனவ மக்களை இந்திய அத்துமீறிய மீனவர்கள்  துன்பப்படுத்தும் செயற்பாடுகளை எக் காரணத்தினாலும்  அனுமதிக்க முடியாது.
 
எமது இலங்கை கடற்படை தமது கடல் எல்லையை பாதுகாப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அத்துமீறும் இந்திய மீன்பிடிப் படகுகளை கைது செய்வது வழமையான செயற்பாடு. 
 
கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை துரத்தும் போது சில அசம்பாவிதங்கள் கடலில் ஏற்படுகின்றன இவை  கடந்த காலங்களிலும் இடம் பெற்றுள்ளன. 
 
ஆகவே இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை   தாண்டாது மீன்பிடியில் ஈடுபடுவது தேவையற்ற அனர்த்தங்களை தவிக்கும்  என அவர் மேலும் தெரிவித்தார்.



Share this:

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies