ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் முன்மொழியப்பட்ட தீர்மான வரைவை இலங்கை நிராகரித்துள்ளது.
51/1 தீர்மானத்திற்கு நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், உள்நாட்டு நடைமுறைகள் மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை (07) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எனும் தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2024.09.09 தொடக்கம் 2024.10.11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டு, இலங்கை அரசின் நிலைப்பாட்டை கீழ்க்காணும் வகையில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் 51ஃ1 தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்;சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், சாட்சிகளைத் திரட்டுகின்ற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாததுடன்,
தீர்மானத்தை நிராகரித்திருப்பினும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவை மற்றும் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்புடனும், மற்றும் ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை பேரவையுடனும், வழமையான மனித உரிமை பொறிமுறையுடனும், தொடர்ந்தும் ஒத்துழைப்பு அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார், தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஜெனீவாவிற்கு தெரியப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனினும் இதற்கு காலம் தேவை, நாளை ஜெனீவாவில் இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சிறிலங்காவில் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் புதிய மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அவையில் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை சேகரிக்கும் காலத்தினை இன்னொரு வருடத்தினால் நீட்டிக்க கேட்கும் ஆணையினை முற்றான நிறைவேற்று அதிகாரத்துடன் நிராகரித்திருக்கின்றது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட இத்தீர்மானத்தினை தகவல் திணைக்களம் அறிவித்தபோது, "மனிதவுரிமைகள் ஆணையத்தின் தீர்மானத்தின் வரைபினை நிராகரிப்பதென்று முடிவெடுத்திருக்கிறது" என்று தெரிவித்தது.
"மனிதவுரிமை ஆணையத்தினால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கான வரைபினை சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நிராகரித்திருக்கின்றது, அத்துடன் தீர்மானம் 51/1 இற்கான தனது எதிர்ப்பினையும் சிறிலங்கா அரசாங்கம் தொடரும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "வெளிநாடுகளிலிருந்து போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களைத் தேடும் பொறிமுறைக்கான அதிகாரத்தினை இன்னுமொரு வருடத்தினால் நீட்டிக்கும் தீர்மானத்தின் வரைபை சிறிலங்கார அரசு ஏற்றுக்கொள்ளவில்லை" என்று அது மேலும் கூறியது.
மக்கள் விடுதலை முன்னணியின் மந்திரிசபை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரத மந்திரி கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகிய மூவரை உள்ளடக்கியது. மனிதவுரிமை அவையின் தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்த இம்மூவரும், மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான உறுதியான நடவடிக்கைகளை உள்ளூர் பொறிமுறைகளைப் பாவித்து தம்மால் எடுக்கமுடியும் என்றும் கூறியிருக்கின்றனர்.
திசாநாயக்கவும், மக்கள் விடுதலை முன்னணியும் இவ்வாறான ஒரு தீர்மானத்தை உறுதியாக எதிர்ப்பார்கள் என்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். ஏனென்றால், கடந்த மாதம் சிங்களவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க "மனிதவுரிமை மீறல்களிலும் போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட எவரையும் தண்டிக்கும் எண்ணம் எனது அரசாங்கத்திற்குக் கிடையாது" என்று உறுதி வழங்கியிருந்தார்.
தமிழ் மக்கள் தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களுக்காகவும், மனித நாகரீகத்திற்கெதிரான குற்றங்களுக்காகவும் சிறிலங்காப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதி விசாரணை ஒன்றின் மூலம் பொறுப்புக்கூற வைக்கவும், அவர்களைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் கூட அக்குற்றவாளிகளைத் தண்டியுங்கள் என்று ஒருபோதும் கேட்டதில்லை" என்று அநுரகுமார திசாநாயக்க வெளிப்படையாகவே பொய்கூறியிருக்கிறார்.
அதேநேரம், அநுரவின் கட்சி இறுதிப்போரில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று நன்கு அறியப்பட்ட போர்க்குற்றவாளிகளை அரவணைத்து வருகிறது. உதாரணத்திற்கு போர்க்குற்றவாளியான ஜெனரல் அருண ஜயசேக்கரவை அநுர குமார திசாநாயக்க தனது பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்து அழகுபார்த்திருக்கிறார். இதனைவிடவும் முன்னாள் விமானப்பட்ட தளபதியும், இறுதியுத்த காலத்தில் பெருமளவு படுகொலைகளில் ஈடுபட்டவனுமாகிய சம்பத் தூயகொந்தாவை தனது பாதுகாப்புச் செயலாளராகவும் நியமித்து மகிழ்ந்திருக்கிறார். இதைவிடவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்கும் பல நிகழ்வுகளில் பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், இறுதியுத்த காலத்தில் கொடூரமான 55 ஆவது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கியவனுமான ஜெனரல் சவேந்திர சில்வாவும் தவறாது அழைக்கப்பட்டு வருகிறான்.
சிறிலங்காவின் புதிய ஜானதிபதி ஐ நா மனிதவுரிமைத் தீர்மானத்தை நிராகரித்திருந்தாலும், பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேட இதுவரை இருக்கும் ஆணையினைத் தொடர்ந்து பாவித்து மேலதிக சாட்சியங்களைத் தேடுவதன் மூலம் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று ஐ நா மனிதவுரிமைச் சபைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.
"சாட்சியங்களைத் தேடுவதற்கான ஆணை நீட்டிக்கப்படாதவிடத்து, உள்நாட்டு விசாரணைப்பொறிமுறையில் நம்பிக்கையிழந்த , ஏமாற்றப்பட்ட தமிழர்களும், அவர்களது உறவுளும் தமக்கான நீதியையும், உண்மையினையும், பரிகாரத்தினையும் தேடி ஐக்கிய நாடுகள் சபையிடம் வருவதை இது ஊக்குவிக்கும்" என்று இந்த அமைப்புக்கள் கூறியிருக்கின்றன