அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை
28 Dec,2022
இலங்கையில் இருந்து செல்வோருக்கு அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை!!!
இலங்கையில் அன்மைய நாட்களில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல்வேறு தரப்பினர்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்காக பல்வேறு வகையாக குழுக்கள் நாடுபூராகவும் இயங்குவதாகவும் எனவே இது தொடர்பாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் வட்ஸ்அப் ஊடாக அமெரிக்க செல்வதற்கான விசாவினை விண்ணப்பிப்பதற்கான செயற்பாடுகளை ஒரு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக தங்களுக்கு அறிய கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தாங்களிடம் இருந்து வட்ஸ்அப் மூலமாக விசா பெற்றுக்கொள்ள முடியாது எனவும், அதனை தூதரகம் பயன்படுத்தவில்லை எனவும், அமெரிக்கா செல்வோருக்கான வேலைவாய்ப்புக்களை தாம் உறுதிப்படுத்தவில்லை என குறிப்பிட்டதுடன், அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தூதரகத்திற்கு காப்புறுதி பணம் செலுத்த தேவையில்லை எனவும் குறிப்பிட்டதுடன் இது தொடர்பில் மக்கள் மிக அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட்ஸ்அப் செயலியூடாக வீசா மோசடி இடம்பெறுகின்றமை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் வீசா பிரிவு, வீசாவிற்கான விண்ணப்பம் தொடர்பான செயற்பாடுகளுக்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தாது என தெரிவித்துள்ளது.
அத்தோடு, வேலை வாய்ப்புகளை தாம் உறுதிப்படுத்தவில்லை என்றும் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தூதரகத்திற்கு காப்பீடு தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீசா சேவைகளை வழங்குவதாகக் குறிப்பிட்டு ஒரு தரப்பினர் மோசடியில் ஈடுபடுவதற்காக இவ்வாறு செயற்படுவதாகக் அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.