நீதிபதி இளஞ்செழியனுக்கு மாபெரும் பதவியுயர்வு!!
31 Oct,2022
இலங்கையின் நீதித் துறையில் கடந்த 25 வருடங்களாக மதிப்புக்குரிய மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் பணியாற்றி வருகின்றார். அதிலும் மேல் நீதிமன்ற நீதிபதியாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மிக அதிக காலம் பணியாற்றியுள்ளார். அதாவது இப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு அதிகமாக மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றுகின்றார்.
எனவே, இவர் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகளின் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எனவே, இலங்கை வரலாற்றில் இப்பதவியினை பெற்றுக்கொள்ளும் முதலாவது தமிழர் என்ற பெருமையினை இவர் பெற்றுக் கொன்டார்.