மலேஷியாவில் இலங்கையருக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்
21 Sep,2022
இலங்கையிலிருந்து 10,000 தொழிலாளர்களை அழைத்துவர மலேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான தீர்மானம், இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்ததாக சன் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
மலேஷிய அரசின் நோக்கம்
இந்த இலங்கை தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கங்களை ஆதரிக்குமாறு தொழில் வழங்குனர்களையும் வணிகங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று சரவணன் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதில் ஆர்வமுள்ள தொழில் வழங்குனர்கள் அமைச்சின் புலம்பெயர்ந்த தொழிலாளர் முகாமைத்துவ நிலையத்திற்கு oscksm@mohr.gov.my அல்லது பணியாளர்கள் திணைக்களத்திற்கு jtksm@mohr.gov.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெறலாம்.