ஜப்பானின் நிதியுதவியை தடுத்த ரணில்! - அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்
24 Jul,2022
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த போது, 2007 ஆம் ஆண்டில், மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
இலங்கை்கு வழங்கும் நிதி உதவிகளை கைவிடுமாறு, ஜப்பானிடம் ரணில் விக்கிரமசிங்க கேட்டிருந்தார் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் அந்த கோரிக்கையை நிராகரித்திருந்த ஜப்பான், தலைவர்களால் இழைக்கப்படும் தவறுகளுக்காக ஸ்ரீ லங்கா மக்களை தண்டிக்கக் கூடாது என ஜப்பான் பதிலளித்துள்ளதாக விக்கிலீக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான போராட்டங்கள், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் நீதி தொடர்பான உரிமைகள் குறித்து கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தியதாக அமைச்சர் தரிக் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சவால்களுக்கு மத்தியில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவை வழங்க பிரித்தானியா தயாராக இருப்பதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.