இந்தியப் பிரதமர் மோடியை சற்று முன்னர் சந்தித்தார் பசில் !
16 Mar,2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கும் நிதி உதவிக்கு இந்திய பிரதமருக்கு நிதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு நிதி அமைச்சர் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
ஆளும்கட்சி உறுப்பினர்களின் அழைப்பினை ஏற்றார் பசில் – ரோஹித
2 பில்லியன் டொலர் இந்திய கடன் வசதி இன்று (புதன்கிழமை) இறுதியாக என தான் நம்புவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இதற்காகவே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை புதுதில்லியில் சந்தித்தார் என கூறினார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாத எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய நிதி இதன்போது கோரப்படவுள்ளது.
கப்பல்கள் நாட்டிற்கு வந்ததன் பின்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் வழங்கப்படும் எனவும் பின்னர் தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்தார்.
எரிபொருள் இல்லை என எதிர்க்கட்சியினர் எழுப்பும் தேவையற்ற பிரசாரம் காரணமாக மக்கள் எரிபொருளை சேகரிக்கத் தொடங்குகிறார்கள் என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இல்லையெனில் மார்ச் 30 அன்று இலங்கையால் நடத்தப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி மாநாட்டில் கலந்துகொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளார்.