பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஜெட் விமான திருப்பதி பயணம் ; இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணை
08 Feb,2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் இந்தியாவின் திருப்பதி ஆலயத்துக்கு தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
2021 டிசம்பர் 31 ஆம் திகதி ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு எழுத்துபூர்வமாக குறித்த ஊடகவியலாளருக்கு தெரிவித்துள்ளது.
ஜெட் பயணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பிரதமரின் நெருங்கிய சகா ஒருவரால் விமானம் திருப்பதி பயணத்திற்காக பரிசாக வழங்கப்பட்டது என பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்கத்கது.