இலங்கையில் பயணப்பையொன்றிலில் பெண்ணின் சடலம் மீட்பு!அடையாளம் காணப்பட்டது
05 Nov,2021
பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது
சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ராகம வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்ற குறித்த பெண்ணின் கணவர் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பைகளைக் கொட்டும் இடமொன்றில் கைவிடப்பட்டிருந்த பயணப்பையிலிருந்து நேற்றைய தினம் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சபுகஸ்கந்த பகுதியில் பயணப்பையொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெண்ணொருவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
எனினும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.