வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 40இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி!
11 Mar,2021
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 40இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் 42 இலங்கையர்கள் வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வந்தவர்கள் என கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய 300 பேரும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 62 பேர் பதிவாகியுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 39 பேரும், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 34 பேரும் மீதமுள்ள 165 பேர் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 86 ஆயிரத்து 684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.