கருணாவுக்கு முக்கிய பதவியை வழங்கினார் பிரதமர் மஹிந்த!
14 Oct,2020
கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார்.
பிரதமர் அலுவலகமான அலரிமாளிகையில் வைத்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது பதவியை பொறுப்பேற்றார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30ஆயிரம் அளவிலான வாக்குகளைப் பெற்ற தனக்கு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கருணா அம்மான் கேட்டிருந்தார். இதற்கமைய பிரதமரால் இவ்வாறு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளராக பதவி வகித்து வரும் செந்தில் தொண்டமானுக்கு தற்போது மேலும் ஒரு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, செந்தில் தொண்டமானுக்கு பிரதமர் அலுவலகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பதவி இன்று மாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.