இலங்கைக்குள் வந்த இலங்கையர்களுக்கு இப்படியொரு நிலை!
                  
                     01 Oct,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	மண்டபம் முகாமில் இருந்து இலங்கைக்கு தப்பி வந்த 2 பேரை, கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
	இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டுப் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது குறித்த நிஷாந்த்(33), பிரசாந்த்(30) இருவரும் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றிருந்தனர்.
	மண்டபம் முகாமில் தங்கியிருந்த அவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால், பொலிஸில் வழக்கும் பதிவானது.
	இதனால், அவர்களால் சட்ட ரீதியாக சொந்த ஊருக்கு செல்ல இயலவில்லை.
	இந்நிலையில், அவர்கள் இருவரும் நாட்டுப் படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்லும்போது, நடுக்கடலில் இலங்கை கடற்படையினரிடம் சிக்கிக் கொண்டனர்.
	இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
	அவர்கள் தப்பிச் சென்ற படகு தங்கச்சிமடத்தை சேர்ந்த லாசர் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்திருக்கிறது.