கோட்டாபயவுக்கெதிராக இரகசியமாக பொலிஸ் குழுவொன்றையும் அம்பாந்தோட்டைக்கு; !
                  
                     04 Sep,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு முன்னுரிமை கொடுக்காது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை கைதுசெய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
	இதற்காக இரகசிய பொலிஸ் குழுவொன்றையும் அம்பாந்தோட்டைக்கு அனுப்பியிருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
	அமெரிக்க குடியுரிமையை இரத்துச்செய்துகொண்டதாக கூறும் கோட்டாபய ராஜபக்ச ஸ்ரீலங்கா கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட விதம் தொடர்பிலான விசாரணைகளை செய்து அறிக்கையொன்றை ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு அமையவே குற்றப்புலனாய்வு பிரிவின் விசேட குழுவொன்று ஹம்பாந்தோட்டை சென்றிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
	கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் பிற்பகல் சமுர்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கான மாநாடொன்றை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்தது.
	இதில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்
	‘இந்த நாட்டில் அதிகளவிலான குற்றங்கள் இடம்பெறுகின்றன. பகிரங்கமாகவே துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர்,குடும்பங்களாக படுகொலை செய்கின்றனர்.
	உயிர்த்த ஞாயிறு தினத்தில் தீவிரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
	300 பேர்வரை பலியாகினார்கள். ஆனால் இரகசிய பொலிஸார் அந்த தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்வதில்லை.
	தற்போது 20 பேர் வரையான இரகசிய பொலிஸார் அடங்கிய விசேட குழுவொன்று அம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் பெயர்
	2005 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் கோட்டாவின் பெயர் காணப்படுகிறதா என்பதை விசாரணை செய்வதற்கு அவர்கள் சென்றுள்ளனர்.
	மிகச்சிறிய சுலபமான காரியமா இது என்பதை பாருங்கள். இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதை விசாரணை செய்ய மாட்டார்கள்.
	ஆனால் இன்றும்கூட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சென்று கோட்டாபய எப்போது கடவுச் சீட்டை
	ஒப்படைத்தார்? புதிய கடவுச்சீட்டை எப்போது பெற்றார்? என்பது குறித்து ஆராய்ந்து இன்றுமாலைக்குள் உடனடி அறிக்கை ஒன்றை வழங்குவதற்கு விடுத்த உத்தரவுக்கு அமைய விரைந்து செயற்படுகின்றனர்.
	இரகசிய பொலிஸாருக்கு வேறு வேலைகள் கிடையாது. உயிர்த்த தினத் தாக்குதல் பற்றி விசாரணை செய்வதில்லை.
	மாறாக கோட்டாபய ராஜபக்சவின் கடவுச்சீட்டு பற்றி விசாரணை செய்கிறார்கள்” என்றார்