தற்போதைய தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லை
                  
                     21 Jul,2019
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சர்வதேச தேவைக்காக நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
	தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடையும் இன்று, நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தை மீள ஆரம்பித்து நடைபெற்ற ஆராதனையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
	இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூறத் தேவையில்லை எனவும் இது நாட்டினுள் கலவரம் ஒன்றை ஏற்படுத்த சர்வதேச நாடுகளின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக வழிதவறிச் சென்ற இளைஞர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
	தலைவர்கள் சர்வதேச சக்திகளுக்கு தேவையான முறையில் நடந்து கொள்வதாகவும் வளமிக்க நாட்டை மேலும் சக்திமிக்கதாக மாற்ற அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
	மிகவும் பலம் வாய்ந்த புலனாய்வு பிரிவை தற்போதைய அரசாங்கம் பலவீனப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
	மாவனெல்ல புத்தர் சிலை தாக்குதலின் போது தகவல் வழங்கிய நபர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கக்கப்பட்டதாகவும் குற்றவாளிகளை விடுதலை செய்து அனைத்து அரசியல் தலைவர்களும் இதனை மூடி மறைத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
	தற்போதைய தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லை எனவும் இந்த சம்பவங்களுக்கு காரணமான அரசாங்கம் உடனடியாக விலகி நாட்டை ஆட்சி செய்யக்கூடியவர்களுக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.