19 மார்ச் வரை சிறிலங்காவுக்கு காலஅவகாசம் –

04 Mar,2017
 

..................
             


UNHRCபோருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கும், புதிய தீர்மான வரைவு வெளியாகியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 அவது அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த வரைவுத் தீர்மானம் நேற்றிரவு ஜெனிவாவில், பேரவையின் உறுப்பு நாடுகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இதன்படி, 2015ஆம் ஆண்டு தீர்மானத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பான விரிவான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும், பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரிலேயே சமர்ப்பிப்பார்.

2015 ஐ.நா தீர்மானத்தில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அனைத்துப் பரிந்துரைகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30/1 தீர்மானத்தில், உண்மை கண்டறியும் மற்றும் இழப்பீடுகள் வழங்கும் பொறிமுறைகளை அமைக்க வேண்டும் என்றும், போரின் போது இழைக்கப்பட்ட மோசமான மீறல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நீதுிபதிகளின் பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கு பரந்தபட்ட அளவில் சட்ட மற்றும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

நேற்று வெளியாகியுள்ள தீர்மான வரைவின் முற்கூட்டிய பிரதி ஒன்றரைப் பக்கங்களில் மாத்திரம் அமைந்துள்ளது.

அதில், 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வரவேற்புத் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் மனித உரிமைகளை ஊக்குவிக்க ஐ.நாவுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் இந்த தீர்மான வரைவில் கோரப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பான இந்த தீர்மான வரைவு குறித்து விவாதிக்கும் முதல் முறைசாராக் கூட்டம், வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 07) ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இணை அனுசரணை நாடுகள், பேரவையின் உறுப்பு நாடுகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மற்றும் ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகப் பிரதிநிதிகள், உள்ளிட்டவர்கள் பங்கேற்று தீர்மான வரைவு வாசகங்கள் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

அமெரிக்கா, பிரித்தானியா தலைமையில் முன்வைக்கப்படும் இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், சமர்ப்பிக்கப்படும் தீர்மானங்களின் வரைவுகளை இணை அனுசரணை நாடுகள் சமர்ப்பிப்பதற்கான இறுதிக் காலக்கெடு மார்ச் 16ஆம் நாள் முடிகிறது.

வரும் மார்ச் 23ஆம் நாள், இந்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


 ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை




சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் முதல்நிலை பிரதி சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறிலங்காவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு –

சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளை கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முழு அளவிலான பணியகம் ஒன்றை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.

இந்தப் பணியகத்தை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும்.

சிறிலங்கா இராணுவம்  ஆக்கிரமித்துள்ள அனைத்து தனியார் நிலங்களையும் முன்னுரிமை அடிப்படையில், மீளக் கையளிக்க வேண்டும். வர்த்தக மற்றும் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளைத் தழுவி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய, நிலைமாறுகால நீதி தொடர்பாக கடப்பாடுகளை காலவரம்புடன் நிறைவேற்றுவதற்காக விரிவான ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டும்.

அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேரவைக்குச் சமர்ப்பித்துள்ள முன்னைய அறிக்கைகள் மற்றும் தற்போதைய அறிக்கையின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அல்லது தனியாக ஐ.நா மனிதஉரிமைகள் பொறிமுறைகளின் முக்கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தெளிவான திட்டம் ஒன்று தயாரிக்க வேண்டும்.

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை வடிவமைக்கும் செயல்முறை, விடயத்தில் பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும்.

உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தும், சிறப்பு அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இந்தச்செயல்முறையில் அவருடன் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட சட்டவரைவுகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட, ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதிகளை சிறிலங்காவுக்கு அழைக்க வேண்டும்.

சித்திரவதை, பாலியல் வன்முறைகள், ஏனைய மனித உரிமை மீறல்கள் தடை செய்யப்பட்டுள்ளன, அவை குறித்து விசாரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான எல்லா வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களையும், பாதுகாப்புப்படைகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இராணுவம், புலனாய்வுப் பிரிவு, காவல்துறைக்கு தெளிவான உத்தரவுகள் பகிரங்கமாக விடுக்கப்பட வேண்டும்.

முழு அளவிலான ஆய்வு செயல்முறையை உருவாக்கி , மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க வேண்டும்.

பொறுப்புக்கூறலை வலுப்படுத்த, பாதுகாப்புத் துறையில் ஏனைய மறுசீரமைப்புகளை நடைமுறைப்படு்த வேண்டும். ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்க விண்ணப்பிக்கும் படைப்பிரிவுகள், மற்றும் தனிநபர்கள் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2016 ஏப்ரல் மே மாத காலப்பகுதியில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர், சுதந்திரமான நீதிபதிகள் மற்றும் சட்டவாளர்கள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் சமர்ப்பித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அனைத்துலக தர நியமங்களுக்கு எற்ப பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

ஜெனிவா பிரகடனங்கள், மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் குறித்த றோம் பிரகடனம் ஆகியவற்றில் இணைந்து கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட கட்டளை அல்லது பொறுப்பான உயர்நிலையினர் எந்த தடைகளும் இல்லாமல் பொறுப்புக் கூறத்தக்க வகையில், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிராக குற்றங்கள், இனப்படுகொலை, மற்றும் காணாமலாக்கப்படுவதுதொடர்பான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அனைத்துலக மனித உரிமைச் சட்ட மற்றும் அனைத்துலக மனிமாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்கு, அனைத்துலக நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களை உள்ளடக்கிய, கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதன் பொறுப்பை திறம்பட செயற்படுத்துவதற்குத் தேவையான வளங்களை வழங்க வேண்டும்.

மரபணுப் பரிசோதனை, தடயவியல் மற்றும் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான வளங்களை உறுதிப்படுத்தியதாக, காவல்துறை மற்றும் நீதித்துறையின் தடயவியல் திறனை வலுப்படுத்த வேண்டும்.

சிறந்த அனைத்துலக நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரின் வழக்குகளும் மீளாய்வு செய்யப்பட்டு, அவர்களை விடுவிக்க வேண்டும் அல்லது உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

சித்திரவதைகள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சரியான விசாரணைகளை நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

போதிய வளங்கள் மற்றும் ஆணையை முன்னெடுப்பதற்கான தொழில்நுட்பங்களுடன் கூடிய உண்மை கண்டறியும் பொறிமுறை ஒன்றை வடிவமைத்து, உருவாக்கி, நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆதரவை வலுப்படுத்தும் வகையில், தேசிய இழப்பீட்டுக் கொள்கை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் விருத்தி செய்ய வேண்டும்.

அமெரிக்காவே தீர்மானத்தை முன்வைக்கிறது – இணை அனுசரணை வழங்குகிறது சிறிலங்கா



ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இம்முறையும் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கவுள்ளதாகவும், இதற்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகத்தின் செயலர் மனோ தித்தவெல, ஜெனிவாவில் இதனை அறிவித்துள்ளார்.

geneva-lanka அமெரிக்காவே தீர்மானத்தை முன்வைக்கிறது – இணை அனுசரணை வழங்குகிறது சிறிலங்கா geneva lanka1

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா அரச குழுவினர், நேற்று முன்தினம் ஜெனிவாவில் பக்க நிகழ்வாக உப மாநாடு ஒன்றை நடத்தினர்.

இங்கு கருத்து வெளியிட்ட மனோ தித்தவெல, “ 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் காலஅவகாசத்தை அளிக்கும் தீர்மானம் இம்முறை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும்.

அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் இந்த தீர்மானத்துக்கு பிரித்தானியா, மொன்ரனிக்ரோ ஆகிய நாடுகளுடன், சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்கும்.

இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கோரியுள்ளது.

புதிய தீர்மானத்தின் மூலம் இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் நம்புகிறது. ” என்றும் மனோ தித்தவெல தெரிவித்தார்.

அதேவேளை, சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவு அடுத்தவாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்னர் குறைந்தது ஒரு உப மாநாடு நடத்தப்பட்டு தீர்மான வரைவு குறித்த ஆலோசனைகள் பெறப்படவுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies