அப்பா காட்டிக் கொடுக்க மாட்டார் – நாமல்
18 Dec,2015
எனது மகன்கள் கைது செய்யப்பட்டால் விஷம் அருந்துவேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோஷித்த ஆகியோர் தாஜுதீன் படுகொலை வழக்கு விசாரணைகள் பிரகாரம் கைது செய்யப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தனது புதல்வர்கள் கைது செய்யப்பட்டால் தான் விஷம் அருந்துவதனை எவராலும் தடுக்க முடியாது என முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பா காட்டிக் கொடுக்க மாட்டார் – நாமல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு பேணவில்லை என்பதனை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமைச்சர் டிலான் பெரேரா நாமல் ராஜபக்க்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரை கடுமையாக சாடி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அறியாமல் இருந்திருக்கலாம். ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் ஒரு தரப்புடன் தந்தை டீல் போட்டிருந்தால் அந்த தரப்பை கடைசிவரை காட்டிக் கொடுக்காத உயர்ந்த உள்ளம் கொண்ட அரசியல்வாதியாக மஹிந்த ராஜபக்க்ஷ திகழ்கின்றார்.
சுதந்திரக் கட்சி மஹிந்தவின் சொந்த சொத்து அல்ல என்பதனை நான் நன்கு அறிவேன். சுதந்திரக் கட்சி வேறு எவரினதும் சொத்து அல்ல என்பதனையும் தாம் அறிந்து வைத்துள்ளதாக நாமல் ராஜபக்க்ஷ சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார்.
விரைவில் சிராந்தி ராஜபக்க்ஷவிடம் விசாரணை
பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்க்ஷவிடம் எதிர்வரும் வாரத்தில் விசாரணைகளை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் மேல் மதிக்கத்தக்க வீடு நிர்மாணிக்கப்பட்டதாகவும், அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து சட்டத்திற்கு முரணான வகையில் மிகக் குறைந்தளவு பணத்திற்கு தமது ஊடக ஆலோசகருக்கு இந்த வீட்டை வழங்கியதாகவும் சிராந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனஸ.