அதிபர் மாளிகையில், அது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் பாதுகாப்புத் தேடுவதற்காக

26 Oct,2015
 

அதிபர் மாளிகையில், தாம் நிலத்தடி சொகுசு மாளிகையை அமைக்கவில்லை என்றும், அது விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்காக அமைக்கப்பட்ட பதுங்குகுழி என்றும், அதுபோன்ற பதுங்கு குழி அலரி மாளிகையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
நாரஹேன்பிட்டிய விகாரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியி அவர்,”அதிபர் மாளிகையில் இரகசிய நிலத்தடி மாளிகை ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது மாளிகை அல்ல. நாம் அமைத்தது பதுங்குகுழி.பதுங்குகுழி ஒன்றை அமைத்துள்ளதாக தெரிவிப்பதை நான் மறுக்கவில்லை. அது போர்க்காலகட்டத்தில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி.
விடுதலைப் புலிகளின் தரப்பு பலமடைந்திருந்த காலகட்டத்தில் எம்மை பாதுகாக்க வேண்டிய தேவை இருந்தது.

அந்த நேரத்தில் முக்கிய பாதுகாப்பு கலந்துரையாடல்களையும் முக்கிய தீர்மானங்களையும் நாம் அதிபர் மாளிகையில் தான் மேற்கொள்வோம்.

அவ்வாறு இருக்கையில் அதிபர் மாளிகை தாக்கப்பட்டால் இந்த பதுங்குழியில் இருந்து செயற்படலாம் என்ற நோக்கத்துக்காகவே இதை உருவாக்கினோம்.

இந்த பதுங்குகுழியை வெளியில் இருந்து பார்க்கும் போது சாதாரண வீடு போன்று தெரியும். ஆனால் உள்ளே பாதுகாப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

போர்க்காலகட்டத்தில் இதை நாம் அமைத்தோம். அப்போதைய சூழ்நிலையில் புலிகளின் தாக்குதல் மிகவும் கடுமையானதாக இருந்தது.

விமான தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டனர். அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள எமக்கு இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது.

அவர்களின் விமான தாக்குதல் மற்றும் நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் என்பன எமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருந்தோம்.

அதிபர் மாளிகையில் மட்டுமல்ல அலரி மாளிகையிலும் இவ்வாறான பதுங்குகுழி உள்ளது. இன்னும் சில முக்கிய இடங்களிலும் பதுங்குகுழிகள் உள்ளன. அவற்றை அமைத்தது தவறென குறிப்பிட முடியாது.

நாம் தாக்குதல் நடத்தும்போது புலிகள் பதுங்குகுழி அமைத்தனர். அதேபோல் அவர்கள் தாக்கும் போது நாம் பதுங்குகுழி அமைத்தோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரனும் இவ்வாறு பதுங்குகுழிகளை அமைத்து வைத்திருந்தார். இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர் வீட்டின் அடியில் பதுங்குகுழியை அமைத்திருந்தார். அதை எவரும் விமர்சிக்கவில்லை.

அதேபோல நாமும் எமது பாதுகாப்பிற்காக பதுங்குகுழியை அமைத்துக் கொண்டோம். புலிகள் செய்வது நியாயமெனின் நாம் செய்வதும் நியாயமானதே.

அவ்வாறு செய்யாமல் நான் இறக்க வேண்டும் என் நினைக்கிறீர்களா? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற எதிர்பார்க்கக் கூடாது.

புலிகளின் விமானங்கள் கொழும்பில் வந்து தாக்குதல் நடத்தியது இளையவர்கள் பலருக்கு மறந்து விட்டது.

பதுங்குகுழி அமைக்க எவ்வளவு செலவானது என்ற எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களும் அமைத்தனர், நாங்களும் அமைத்தோம் அவ்வளவு தான்” என்று தெரிவித்தார்.


மஹிந்த ராஜபக்ஷ வெட்­டிய குழியே இன்று அவ­ருக்கு ஆபத்­தா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது. அவர் கொடுத்த பொல்லை வைத்தே அவரைத் தாக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது அர­சாங்கம்.

இப்­போ­தைக்கு அர­சாங்­கத்தின் இந்த வாதம்- பதி­லடி அர­சியல் ரீதி­யாக எடு­பட்­டுள்­ளது. என்­றாலும், இது எந்தளவு காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

பொல்லைக் கொடுத்து அடி­வாங்­கி­யது என்­பார்­களே, அது தான் இப்­போது மஹிந்த ராஜபக் ஷவுக்கு நடக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவை வைத்தே, அவ­ரது வாயை அடைக்­கின்ற உத்­தியைத் தான், தற்­போ­தைய அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கி­றது.

குறிப்­பாக, போர்க்­குற்ற விசா­ரணை விட­யத்தில், அர­சாங்கம் கடு­மை­யான நெருக்கடிக­ளையும் அழுத்தங்களையும் எதிர்­கொண் டாலும், அதற்­கான பழியில் இருந்து தப்­பித்துக் கொள்வதற்­கான கரு­வி­யாக மஹிந்த ராஜபக் ஷவையே தெரிவு செய்­தி­ருக்­கி­றது.

ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணை அறிக்­கைக்கு எதி­ரா­கவும், ஜெனீவா தீர்மானத்­துக்கு ஆத­ரவு அளித்த அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்­டுக்கு எதி­ரா­கவும் மஹிந்த ராஜபக் ஷவும் அவ­ரது அணி­யி­னரும், சிங்­கள மக்­க­ளி­டையே தீவி­ர­மான கருத்­துக்­களை பரப்பி வரு­கின்­றனர்.

இது அர­சாங்­கத்­தினால் முன்­னரே எதிர்­பார்க்­கப்­பட்ட விடயம் தான்.

அதே­வேளை, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யுடன் இணைந்து செயற்­பட வேண்­டி­யதும், பொறுப்­புக்­கூறல் கடப்­பா­டு­களை நிறை­வேற்ற வேண்­டி­யதும் அர­சாங்­கத்தின் கட­மை­யா­கவே உள்­ளது.

ஒரு பக்­கத்தில் இந்த கடப்­பாட்டில் இருந்து விலக முடி­யாது. அதே­வேளை, மஹிந்த அணி­யினர் அதற்கு எதிராக வீசப்­போகும் அஸ்­தி­ரங்­க­ளையும் வெற்­றி­க­ர­மாக எதிர்­கொள்ள வேண்டும்.

அதை­விட, தமிழர் தரப்பின் நம்­பிக்­கை­யையும் காப்­பாற்­றி­யாக வேண்­டிய கட்­டா­யமும் இருக்­கி­றது, இந்த அரசாங்­கத்­துக்கு.

இதனால் எப்­ப­டி­யா­வது போர்க்­குற்ற விசா­ர­ணையை முன்­னெ­டுக்க வேண்­டிய நிலையில் அர­சாங்கம் இருக்கிறது.

ஜெனீவா தீர்­மா­னத்­தையும், ஐ.நா. விசா­ரணை அறிக்­கை­யையும், மஹிந்த ஆத­ரவு அணி­யினர், அர­சாங்­கத்­துக்கு எதி­ரான ஒரு ஆயு­த­மாக மட்டும் பார்க்­க­வில்லை. அது, தமது கழுத்­துக்குப் போடப்­படும் சுருக்­கா­கவும் கூடப் பார்க்­கின்­றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் போரின் போது இடம்­பெற்ற மீறல்­களை மையப்­ப­டுத்­தியே விசாரணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்த விசா­ர­ணை­களில், இரா­ணு­வத்­தினர் எதிர்­கொள்­ளப்­போகும் விசா­ர­ணை­க­ளுக்கு முன்­னைய அரசாங்கத்தில் இருந்­த­வர்­களே பொறுப்­பேற்க வேண்­டி­யி­ருக்கும்.

போருக்கு அர­சியல் ரீதி­யாக தலை­மை­யேற்­ற­வர்கள், அதற்­கான உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்­த­வர்கள், விசா­ர­ணை­களை எதிர்­கொள்­ளலாம்.

அவர்­களின் மீது குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­பட்டால், ஒரு­வேளை தண்­ட­னையை எதிர்­கொள்ளும் நிலை கூட வரலாம்.

எனவே தான், இத்­த­கைய விசா­ர­ணை­களைத் தவிர்க்­கவும், தடுக்­கவும் மஹிந்த ராஜபக்ஷ அணி­யினர் முயற்சிக்­கின்­றனர்.

சர்­வ­தேச விசா­ரணை அல்­லது சர்­வ­தேச தலை­யீட்­டுடன் கூடிய நம்­ப­க­மான விசா­ர­ணை­க­ளுக்கு மஹிந்த ராஜபக் ஷ ஆரம்­பத்தில் இருந்தே இணங்க மறுத்து வந்­ததன் மர்மம் இது தான்.

இப்­போது அவரைத் தாம் மின்­சார நாற்­கா­லியில் இருந்து பாது­காத்து விட்­ட­தாக அர­சாங்கத் தரப்பு கூறிவந்தாலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அவ­ருடன் இணைந்து போரை நடத்­தி­ய­வர்­க­ளுக்கோ ஆபத்து முற்றாக விலகிவிட்­ட­தெனக் கூறமுடி­யாது.

இந்­த­நி­லையில், ஜெனீவா தீர்­மா­னத்­தையும், ஐ.நா. விசா­ரணை அறிக்­கை­யையும் வைத்து அர­சாங்­கத்­துக்கு எதிரான சிங்­கள இன­வாத அலை ஒன்றை பரவச் செய்யும் முயற்­சியில் மஹிந்த ராஜபக் ஷ தரப்­பினர் ஈடுபட்டுள்­ளனர்.

 

மீண்டும் சிங்­கக்­கொ­டி­யேந்தி, சிங்­கள நாடாக இலங்­கையைக் கட்­டி­யெ­ழுப்ப சிங்­க­ள­வர்கள் முன்­வர வேண்டும் என்று விமல் வீர­வன்ச கடந்த 19ஆம் திகதி விஹா­ர­மா­தேவி பூங்­காவில் நடத்­திய கூட்­டத்தில் அழைப்பு விடுத்தி­ருந்தார்.

இது, அர­சாங்­கத்­துக்கும், தமி­ழர்­க­ளுக்கும் எதி­ரான இன­வாத அலை ஒன்றை உரு­வாக்­கு­கின்ற மஹிந்த தரப்பினரின் முயற்­சி­யோகும்.

ஆனால், அதனை அவ்­வ­ளவு இல­கு­வாக செய்ய முடி­யுமா என்­பது கேள்­விக்­கு­ரிய விட­யமே,

போர்க்­குற்ற விசா­ரணை விவ­காரம், சிங்­கள மக்கள் மத்­தியில் எதிர்­ம­றை­யான விமர்­ச­னங்­க­ளையும், உணர்வுகளையும் ஏற்­ப­டுத்தும் என்­பதை அர­சாங்கம் நன்­றா­கவே அறியும்.

மஹிந்த ராஜபக்ஷ அணி­யினர், தமது அர­சியல் நல­னுக்­காக இதனை எந்­த­ளவு தூரத்­துக்குக் கொண்டு செல்வார்கள் என்­பதும் அர­சாங்­கத்­துக்குத் தெரியும்.

அதனால் தான், மஹிந்த ராஜபக்ஷவை வைத்தே அவர் சிங்­கள மக்கள் மத்­தியில் கட்­டி­யெ­ழுப்ப முனையும், அரச எதிர்ப்பு அலையை, முறி­ய­டிக்கும் நகர்­வு­களில் அர­சாங்கம் இறங்­கி­யி­ருக்­கி­றது.

ஐ.நாவு­டனும், மேற்­கு­ல­கு­டனும், இலங்­கையின் புதிய அர­சாங்கம் நெருக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொண்டு, பொறுப்புக்­கூறல் பற்­றிய கடப்­பா­டு­களை நிறை­வேற்ற இணங்­கிய போது, அதற்கு எதி­ராக மஹிந்த ராஜபக் ஷ ஆத­ரவு அணி­யினர் வெளி­யிட்ட எதிர்ப்பை அர­சாங்கம் அடக்­கி­யது.

ஐ.நா. பொதுச்­செ­யலர் பான் கீ மூன் 2009இல் இலங்கை வந்த போது, பொறுப்­புக்­கூறல் கடப்­பாட்டை நிறைவேற்று­வ­தாக, ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவே வாக்­கு­றுதி அளித்­தி­ருந்தார்.

அதனை நிறை­வேற்­றா­ததால் தான், இலங்கை நெருக்­க­டிக்குள் சிக்க நேர்ந்­தது என்­பதை அர­சாங்கம் தெளிவுபடுத்­தி­யது.

இது அர­சாங்­கத்­துக்குக் கிடைத்த முதல் வெற்றி.

அதை­ய­டுத்து, மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்­தி­ருந்தால், ஆயிரம் மடங்கு கடு­மை­யா­ன­தாக ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணை அறிக்கை அமைந்­தி­ருக்கும், நாம் ஆட்­சிக்கு வந்­ததால் தான், அதன் காரத்தை குறைத்து விட்டோம் என்றும் நம்ப வைத்­தி­ருக்­கி­றது தற்­போ­தைய அர­சாங்கம்.

இது அவர்­களின் இரண்­டா­வது வெற்றி.

இப்­போது அடுத்த தடையைத் தாண்ட வேண்­டிய நிலையில் அர­சாங்கம் இருக்­கி­றது.

அதா­வது உள்­நாட்டு விசா­ர­ணையே நடத்­தப்­ப­ட­வுள்­ளது என்று அர­சாங்கம் சிங்­கள மக்­களை நம்­ப­வைக்க முயன்­றாலும், ஏதோ ஒரு வகையில், வெளி­நாட்டு நீதி­ப­திகள், வழக்குத் தொடு­னர்கள், சட்­ட­வா­ளர்கள் இதில் பங்­கேற்கப் போகின்­றனர் என்­பது உறுதி.

அதற்­கான உத்­த­ர­வாதம், ஜெனீவா தீர்­மா­னத்தில் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதனை மீறி அர­சாங்கம், உள்­நாட்டு விசா­ர­ணையே நடத்­தப்­படும் என்று அடம்­பி­டிக்க முடி­யாது.

வெளி­நாட்டு நீதி­ப­திகள் உள்­ள­டக்­கப்­பட்டால், அது கலப்பு விசா­ரணை தான்.

கலப்பு விசா­ரணை நாட்டின் இறை­மையை மீறு­கின்ற செயல் என்றும், அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணா­னது என்றும், மஹிந்த அணி­யினர் போர்க்­கொடி எழுப்பத் தொடங்கி விட்­டனர்.

கடந்­த­வாரம், இவர்கள் விஹா­ர­மா­தேவி பூங்­காவில் பெரி­ய­தொரு கூட்­டத்­தையும் நடத்­தி­யி­ருந்­தனர்.

இந்தக் கட்­டத்தில் அர­சாங்கம், நடக்­கப்­போ­வது கலப்பு விசா­ரணை அல்ல உள்­நாட்டு விசா­ர­ணையே என்று நிரூபிக்க முனை­ய­வில்லை.

அது, ஆபத்­தான விட­ய­மா­கி­விடும் என்­பதால், தந்­தி­ர­மாக மஹிந்த கொடுத்­தி­ருந்த பொல்லை வைத்தே அவ­ரது உச்­சியில் அடி­போடத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

இந்த போர்க்­குற்ற விசா­ர­ணைக்கு உத­வு­வ­தற்­காக, ஜப்­பா­னிய நீதி­பதி மோட்டூ நொகுசி கொழும்பு வந்திருக்கிறார்.

விசா­ர­ணை­க­ளுக்கு ஜப்­பா­னிய நீதி­பதி உதவப் போவ­தாக நாடா­ளு­மன்­றத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பகி­ரங்­க­மா­கவே குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஜெனீவா கூட்­டத்­தொ­டரில் உரை­யாற்­றிய ஜப்­பா­னிய பிர­தி­நிதி இதனை ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்தார்.

மோட்டூ நொகுசி என்ற இந்த நீதி­பதி, கம்­போ­டி­யாவில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­களை விசா­ரிக்கும் தீர்ப்பாயத்தில் இடம்­பெற்­றி­ருந்­தவர்.

இந்த தீர்ப்­பா­யத்தில் இடம்­பெற்­றி­ருந்த, நியூ­ஸி­லாந்து நீதி­பதி சில்­வியா கார்ட்ரைட் அம்­மையார், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­யகம் உரு­வாக்­கிய விசா­ரணைக் குழு­வுக்கு, ஆலோ­சனை வழங்கும் குழு­விலும் இடம்­பெற்­றி­ருந்தார்.

அவரே கலப்பு நீதி­மன்ற விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

அவ­ருடன், பணி­யாற்­றிய ஜப்­பா­னிய நீதி­பதி, இங்கு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள போர்க்­குற்ற விசா­ர­ணை­களில் முக்­கி­ய­மான பங்­க­ளிப்புச் செய்வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இது­பற்­றிய அறி­விப்பை வெளி­யிட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்த ஜப்­பா­னிய நீதி­ப­தியை தாம் அழைக்கவில்லை என்றும், மஹிந்த ராஜபக் ஷவே, காணா­மற்­போனோர் குறித்து விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழு­வுக்கு ஆலோ­சனை வழங்க அழைத்­த­தா­கவும் அவர் கூறி­யி­ருந்தார்.

-

மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்­சிக்­கா­லத்தில், உட­ல­கம ஆணைக்­கு­ழு­வுக்­கான ஆலோ­ச­கர்­களை வெளிநாடுகளில் இருந்து நிய­மித்­தி­ருந்தார். பர­ண­கம ஆணைக்­கு­ழு­வுக்கும் வெளி­நா­டு­களின் ஆலோ­ச­கர்­களை நியமித்­தி­ருந்தார்.

அவர் விடுத்த அழைப்­புக்­க­மை­யவே இப்­போதும் வெளி­நாட்­ட­வர்­களை அழைக்­கிறோம் என்று பதி­லடி கொடுக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது அர­சாங்கம்.

அது­போ­தா­தென்று, மஹிந்த ராஜபக்ஷ நிய­மித்த பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யையும் வெளி­யிட்டு பரப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்த ஆணைக்கு ஏழு போர்க்­குற்­றங்கள் குறித்து சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் விசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று பரிந்­து­ரைத்­துள்­ளது.

இதனை மஹிந்த ராஜபக் ஷ நிரா­க­ரிக்க முடி­யாது. ஏனென்றால் இது அவர் நிய­மித்த ஆணைக்­குழு.

மஹிந்த ராஜபக்ஷ வெட்­டிய குழியே இன்று அவ­ருக்கு ஆபத்­தா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது.

அவர் கொடுத்த பொல்லை வைத்தே அவரைத் தாக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது அர­சாங்கம்.

இப்­போ­தைக்கு அர­சாங்­கத்தின் இந்த வாதம்- பதி­லடி அர­சியல் ரீதி­யாக எடு­பட்­டுள்­ளது.

என்­றாலும், எடுபட்டுள்ளது.

என்றாலும், இது எந்தளவு காலத்துக்கு தாக்குப்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

-சத்திரியன்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies