பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி-இந்தியாவில் உற்சாக வரவேற்பு பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியாக – 45 நிமிடங்கள் பேச்சு -எதிர்ப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல

15 Feb,2015
 

             


புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியாக நடத்தவுள்ள 45 நிமிடப் பேச்சுக்களின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற மற்றும் மனித உரிமைகள் அறிக்கையை இந்தியாவும் கூட அதிகமாக கவனித்து வருகிறது.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், கொழும்புடன் இந்தியா நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி சென்றுள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியாக – 45 நிமிடங்கள் பேச்சு நடத்தவுள்ளார்.

இதில் இருநாடுகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசப்படும்.

அமெரிக்காவின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், மற்றும் சிறிலங்காவுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கை, குறித்தும் இதன் போது ஆராயப்படும்.

அத்துடன், தமிழர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண கொழும்பு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டத்தையும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், சிறிலங்கா அதிபரிடம், இந்தியப் பிரதமர் வலியுறுத்துவார் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் மார்ச் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கவுள்ளது.

கடந்தவாரம் புதுடெல்லியில் நடந்த உயர்மட்டக் கூட்டங்களில், கலந்துரையாட அட்டவணைப்படுத்தப்பட்ட விடயங்களில் சிறிலங்கா விவகாரமே முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று பிற்பகல் 01.55 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் இலங்கை விமான நிலையத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது. இந்த விஜயத்தில் சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன மற்றும் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 17 பேர் கலந்துகொள்கின்றனர். ஜனாதிபதி எதிர்வரும் 18ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


மைத்திரிபால குழுவினருக்கு இந்தியாவில் உற்சாக வரவேற்பு


பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கு மகத்தான வரவேற்று அளிக்கப்பட்டது.

இந்திய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில் ஜனாதிபதியை வரவேற்றனர்.

இலங்கை சிறுவர்கள் ஜனாதிபதியையும் பாரியாரையும் அவர்கள் தங்கும் ஹோட்டலில் வரவேற்றனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன் செனவிரத்ன ஆகியோரும் அங்கு பிரசன்னமாகியிருந்தார்


இலங்கை ஜனாதிபதி வருகையை எதிர்ப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல

இலங்கை ஜனாதிபதியின் இந்திய வருகை, அந்நாட்டு தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை ஜனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல.

இலங்கை தமிழர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், தமிழக பாஜகவும் உறுதியாக உள்ளது.

இலங்கை தமிழர் பிரச்சினை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை ஜனாதிபதியின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என தமிழிசை கூறினார்



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies