ஜனாதிபதி மஹிந்த – ஜப்பான் விசேட தூதுவர் அகாஷி இன்று சந்திப்பு ஜப்பான் பிரதமர் இலங்கை விஜயம்:

06 Sep,2014
 





ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதான பிரதிநிதி யசுசி அகாஷி இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று நடைபெற்றது.

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே நாளை இலங்கைக்கு விஜயம் செய்வதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்..

இந்தநிலையில் ஜப்பான் பிரதமரின் வருகைக்கு முன்னோடியான சந்திப்பாகவே யசுசி ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

எனினும் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு எந்த தகவலையும் வெளியிடவில்லை.


இரண்டாம் இணைப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ  பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்த ஜப்பான் நாட்டு விசேட பிரதிநிதி யசூசி அகாசி இன்று த. தே. கூட்டமைப்பை  ஏழு மணிக்கு நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

இந்த சந்திப்பின் போது தற்போதைய வட மாகாண நிலைமை மற்றும்  வடமாகாண சபை நிர்வாகத் தடைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடாத்தப்படவுள்ளது என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவரின் விஜயத்தின் போது வட மாகாண அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவ வேண்டிய அவசியத்தையும் இவரிடம் எடுத்துக்காட்ட த. தே.கூ ஆயத்தமாகி வருகின்றது.

ஆனால் ஜப்பானிய விஷேட தூதுவருக்கு வட பகுதிக்கு விஜயம் மேற்கொள்ள அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும் யசூசி அகாசி தான் வடபகுதிக்கு அவசியம் செல்ல வேண்டுமென அரசிடம் வலியுறுத்தியதை தொடர்ந்து அரசு பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் கூறுகின்றது.


சீனாவின் செல்வாக்கை ஈடு செய்யும் நோக்கில் ஜப்பான் பிரதமர் இலங்கை விஜயம்: சர்வதேச ஊடகம்



ஜப்பானிய பிரதமரின் இலங்கை விஜயமானது தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை ஈடு செய்யும் நடவடிக்கையாக இருப்பதாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை சமநிலை செய்யும் நோக்கில், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான தனது மூன்று நாள் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.

ஜப்பானிய பிரதமர் இன்று பங்களாதேஷின் டாக்கா நகருக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இதனையடுத்து அவர் நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார்.

சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக ஜப்பானிய பிரதமரின் இலங்கை வருகை அமைந்துள்ளது.

இலங்கை ஏற்கனவே சீனாவின் உதவியுடன் நாடு முழுவதும் பாரிய அளவிலான அபிவிருத்தி மற்றும் கட்டுமான திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை அதிகரிக்கும் நோக்கில், ஜப்பானிய பிரதமர் இன்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்திக்க உள்ளதுடன் நாளைய தினம் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க உள்ளார்.

டோக்கியோவில் இருந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பானிய பிரதமர்,

ஜப்பானிய பிரதமர் ஒருவர் 14 வருடங்களுக்கு பின்னர் பங்களாதேஷூக்கும் 24 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கும் விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பொருளாதரம் மற்றும் அரசியல் களங்களில் வளர்ந்து வரும் செல்வாக்கை கொண்ட நாடுகள் என ஜப்பானிய பிரதமர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies