விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் சியாட்டில் துறைமுக நகரில் 30-க்கும் மேற்பட்ட படகுகள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியே தீப்பிழம்பாக காட்சி அளித்தது.
அமெரிக்காவின் சியாட்டில் துறைமுக நகரில் 30-க்கும் மேற்பட்ட படகுகள் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்ததால், அப்பகுதியே தீப்பிழம்பாக காட்சி அளித்தது.
அமெரிக்காவின் மேற்கு துறைமுக நகரான சியாட்டிலில் உள்ள போர்ட்டேஜ் பே பகுதி அருகே, இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள படகு நிறுத்துமிடம் ஒன்றில் வரிசையாக படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அப்பகுதியில் வெடிசத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் மேற்கு துறைமுக நகரான சியாட்டிலில் உள்ள போர்ட்டேஜ் பே பகுதி அருகே, இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள படகு நிறுத்துமிடம் ஒன்றில் வரிசையாக படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அப்பகுதியில் வெடிசத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.
முதலில் இரண்டு படகுகள் தீப்பற்றிய நிலையில், மளமளவென மற்ற படகுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதனை அடுத்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முதலில் இரண்டு படகுகள் தீப்பற்றிய நிலையில், மளமளவென மற்ற படகுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதனை அடுத்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர். அதிகாலை 3.30 மணி வரைக்கும் மீட்பு பணிகள் நடைப்பெற்றுள்ளது. மீட்பு பணியின் போது நடுத்தர வயது மிக்க நபரை ஒரு கப்பலின் உள்ளிருந்து போலீசார் மீட்டுள்ளனர்.
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர். அதிகாலை 3.30 மணி வரைக்கும் மீட்பு பணிகள் நடைப்பெற்றுள்ளது. மீட்பு பணியின் போது நடுத்தர வயது மிக்க நபரை ஒரு கப்பலின் உள்ளிருந்து போலீசார் மீட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை பிடித்து மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை பிடித்து மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.