நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்த கார் - பஸ்; 30 பேர் பலி
08 Feb,2023
பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி பள்ளத்தாக்கில் விழுந்தன. இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாட்டின் கில்கித்-பல்திஸ்தான் மாகாணம் கில்கித்தில் இருந்து ராவல்பெண்டி நோக்கி நேற்று இரவு பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் சென்றுகொண்டிருந்தபோது
எதிரே வந்த கார் மீது பஸ் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சும், காரும் மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.