பஸ் குறுக்கே வந்த கழுதை மீது மோதாமல் விபத்தில் சிக்கி 20 பேர் பலி!
20 Jan,2023
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான செனகலில் லோகா என்ற இடத்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் கழுதை ஒன்று குறுக்கிட்டது. அதன் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் பேருந்தை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்தது.
இதில், பேருந்தில் இருந்த 20 பயணிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் காப்ரீன் என்ற இடத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். தரமற்ற சாலையால் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.