சீனாவில் கடுமையான நிலநடுக்கம்: பலி 3 ஆக உயர்வு; 60 பேர் காயம்
16 Sep,2021
சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்திற்கு லுக்சியான் கவுன்டி பகுதியை சேர்ந்த புஜி டவுன்சிப்பில் உள்ள கிராமம் ஒன்றில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர 3 பேர் காயம் அடைந்து உள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், சீனாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்து உள்ளது. 60 பேர் காயமடைந்து உள்ளனர். 35 வீடுகள் முழுவதும் சேதமடைந்து உள்ளன. இதனை தொடர்ந்து 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.