ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது: 7 குழந்தைகள் உள்பட 40 பேர் பலி
10 Aug,2014


ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் 40 பேர் பயணித்துள்ளனர். இன்று காலையில் டெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையமான மேஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் குடியிருப்பு பகுதிக்குள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் செய்தி நிறுவனமான இர்னா கூறியுள்ளது.
டாபான் ஏர்லைன்சுக்கு சொந்தமான அந்த விமானம் காலை 9.45 மணியளவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதன் என்ஜின் பழுதானதால் அசாதி குடியிருப்பு பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. இச்சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 7 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியானதாக இர்னா உறுதிப்படுத்தியுள்ளது.
தலைநகர் டெஹ்ரானிலிருந்து இந்த விமானம் அந்நாட்டின் கிழக்குப் பகுதி நகரமான டபாசுக்கு சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் உள்ள மெராபாத் விமான நிலையத்தில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. தபான் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான அந்த விமானத்தில் 40 பேர் பயணித்துள்ளனர். மெராபாத் விமான நிலையத்திலிருந்து கிழக்கில் தபாஸ் நகருக்கு செல்வதற்காக விமானம் புறப்பட்டுள்ளது. பறக்க துவங்கிய சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.18 மணிக்கு விபத்து நடந்துள்ளது. அதில் பயணம் செய்த 40 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதை அந்நாட்டு ஊடகங்களான ஐ.ஆர்.என்.ஏ. மற்றும் பார்ஸ் நியூஸ் ஏஜென்சிகளும் உறுதி செய்துள்ளன. விபத்துக்கு என்ஜின் கோளாறே காரணம் என கூறப்படுகிறது. எனினும், விபத்து மற்றும் உயிரிழப்பு குறித்த எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இன்னும் வரவில்லை.
இது இந்த மாதத்தில் மட்டும் நிகழ்ந்த 4-வது பெரிய விமான விபத்தாகும்.