சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 398 ஆக உயர்வு
04 Aug,2014

சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 398 ஆக உயர்வு
சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள சர்வோடாங் நகரம் லூதியன் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 12 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. 30 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்தன.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி முதலில் 180 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின. தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 398 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப்பணியில் போலீசாரும், துணை ராணுவ படையினரும் ஈடுபட்டு வருகிறார்கள். மீட்புப்பணிகளை துரிதப்படுத்துமாறு சீன அதிபர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

தெற்கு சீனாவின் மலைப்பகுதியான யுனான் மாகாணத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 381 பேருக்கு மேலாக பலியானார்கள். மேலும் 1881 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான க்சின்ஹுவா தெரிவித்துள்ளது.
இம்மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள சோஹ்டாங் எல்லைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பூகம்பத்தால் லாங்டவுஷன் நகரில், கட்டிங்களின் ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்ற சீன அரசு போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிலோமீட்டர் தூரம் வரை இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
பூகம்பம் ஏற்பட்டவுடன் பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வீதிகளுக்கு ஒடி வரும் வீடியோ காட்சிகளை சமூக வளைதளங்கள் மற்றும் அரசுத் தொலைக்காட்சி ஒலிபரப்பியது நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது