சீனாவில் பயங்கர நிலநடுக்கம்; 150 பேர் பலி-நேபாள நாட்டில் நிலச்சரிவு சிக்கி 159-க்கும் மேற்பட்டோர் பலி
03 Aug,2014


சீனாவின் தென்மேற்கு பகுதியான யுவான் மாகாணத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் (08.30-ஜி.எம்.டி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 150 பேர் பலியாகியிருப்பதாக முதற்கட்ட தகவல் வந்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அங்குள்ள ஊடகமான சி.சி.டி.வி. கடந்த 14 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக்பெரிய நிலநடுக்கம் இது என தெரிவித்துள்ளது.

நேபாள நாட்டில் நிலச்சரிவு சிக்கி 159-க்கும் மேற்பட்டோர் பலி மீட்பதில் சிக்கல்
நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 159-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள் நாட்டில் சிந்துபல்சோக் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் அங்குள்ள சன்கோஷி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாள நாட்டின் மலைக்கிராமங்களைச் சேர்ந்த 159-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவுகளில் சிக்கியிருப்பதால் அவர்களை மீட்பதற்க்கா அந்நாட்டு ராணுவம் மற்றும், மீட்புக்குழுவினர் நிலச்சரிவினால் பாதிக்கபட்ட இடத்திற்க்கு விரைந்துள்ளனர். தற்போது மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.159 பேரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவு ஏற்பட்ட இடம் மலைசூழ்ந்த பிரதேசம் என்பதால் வான் வழியாக ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலச்சரிவால் சன்கோஷி ஆற்றின் நீரோட்டம் தடைபட்டுள்ளதால் மலைகளுக்கு நடுவே இரண்டரை கிலோமீட்டர் நீளத்திற்கு ஏரி போன்ற அமைப்பு உருவாகியுள்ளது. இதில், எந்த நேரத்திலும் உடைப்பு ஏற்படலாம் என்பதால், பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கரையோரங்களிலுள்ள மக்களுக்கு அந்நாட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு செல்ல உத்தரவு பிறக்கபட்டுள்ளது.
நேபாள எல்லையையொட்டியுள்ள பீகார் மாநிலத்தின் கோசி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால், தாழ்வான பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுவருகிறது.