36 இடங்களை குறிவைத்த பாகிஸ்தானின் 300+ ட்ரோன்களை வீழ்த்தியது இந்தியா

09 May,2025
 

 
 
 
புதுடெல்லி: இந்தியாவுக்குள் 36 இடங்களை குறிவைத்து தாக்குவதற்காக பாகிஸ்தான் செலுத்திய 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ராணுவம் வெற்றிகரமாக அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி விவரித்துள்ளார்.
 
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிந்தைய பாகிஸ்தான் ராணுவத்தின் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் பங்கேற்று கடந்த 7-ம் தேதி பயங்கரவாதிகள் முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்தும், அதற்கு இந்திய ராணுவம் அளித்து வரும் பதிலடி குறித்தும் விளக்கம் அளித்தனர்.
 
 
கர்னல் சோபியா குரேஷி கூறும்போது, "மே 7 மற்றும் 8-ஆம் தேதி இரவு, இந்திய ராணுவ உள்கட்டமைப்பை குறிவைக்கும் நோக்கில், மேற்கு எல்லை முழுவதும் இந்திய வான்வெளியை பல முறை அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. இது மட்டுமல்லாமல், கட்டுப்பாட்டுக் கோட்டில் கனரக ஆயுதங்களையும் பாகிஸ்தான் ராணுவம் ஏவியது. 36 இடங்களை தாக்க முயற்சிப்பதற்காக சுமார் 300 முதல் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தியது. இந்திய ஆயுதப் படைகள் இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அல்லாத வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த ட்ரோன்களில் பலவற்றை சுட்டு வீழ்த்தின.
 
 
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிக்கும் நோக்கிலும், உளவுத் தகவல்களை சேகரிக்கும் நோக்கிலும் பாகிஸ்தான் இத்தகைய பெரிய அளவிலான வான்வழி ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்களின் உடைந்த பாகங்கள் குறித்து தடயவியல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப அறிக்கைகளின்படி, அவை துருக்கி நாட்டின் அசிஸ்கார்டு சோங்கர் ட்ரோன்கள் என்பது தெரிய வந்துள்ளது” என தெரிவித்தார்.
 
விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், "பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானில் உள்ள நான்கு வான் பாதுகாப்பு தளங்கள் மீது ஆயுதமேந்திய ட்ரோன்கள் ஏவப்பட்டன. அவற்றில் ஒன்று பாகிஸ்தானின் ஏடி ரேடாரை அழித்தது. கனரக பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ஆயுதமேந்திய ட்ரோன்களைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பீரங்கித் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது. இதன் விளைவாக இந்திய ராணுவ வீரர்களுக்கு சில இழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன. இந்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவமும் பெரும் இழப்புகளைச் சந்தித்தது.
 
மே 7-ஆம் தேதி இரவு 08:30 மணிக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய போதிலும், பாகிஸ்தான் அதன் சிவில் வான்வெளியை மூடவில்லை. இந்தியா மீதான அதன் தாக்குதல் விரைவான வான் பாதுகாப்பு பதிலடியைத் தரும் என்பதை முழுமையாக அறிந்த பாகிஸ்தான் சிவில் விமானத்தை கேடயமாகப் பயன்படுத்துகிறது.
 
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சர்வதேச எல்லை அருகே பறந்து கொண்டிருந்த சர்வதேச விமானங்கள் உட்பட சந்தேகத்துக்கு இடமில்லாத சிவில் விமானங்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல. எங்கள் அறிவிக்கப்பட்ட மூடல் காரணமாக இந்தியப் பக்கத்தில் உள்ள வான்வெளி சிவில் விமானப் போக்குவரத்திலிருந்து முற்றிலும் விலகி உள்ளது. இருப்பினும், கராச்சி மற்றும் லாகூர் இடையே விமானப் பாதையில் பறக்கும் சிவில் விமான நிறுவனங்கள் உள்ளன. இந்திய விமானப்படை தனது பதிலடியில் கணிசமான நிதானத்தைக் காட்டியது. இதனால் சர்வதேச சிவில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்தது” என தெரிவித்தார்.
 
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், "இந்திய நகரங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் வியாழக்கிழமை இரவு ஆத்திரமூட்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்திய ஆயுதப் படைகள் பொறுப்புடன் பதிலடி தந்தன. பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதல்களை அதிகாரப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும் மறுப்பது, அவர்களின் இரட்டை நிலைப்பாட்டையும், அவர்கள் ஆழமாக செல்ல விரும்புவதையும் காட்டுகிறது.
 
அமிர்தசரஸ் போன்ற நகரங்களை இந்திய ராணுவம்தான் குறிவைத்தது என பாகிஸ்தான் கூறுகிறது. தனது செயல்களுக்கு பொறுப்பேற்பதற்கு பதிலாக இவ்வாறு அபத்தமான மற்றும் மூர்க்கத்தனமான கூற்றுக்களை பாகிஸ்தான் செய்தது. அவர்களின் வரலாறு அப்படிப்பட்டது. ட்ரோன் தாக்குதல் மூலம் நான்காமா சாஹிப் குருத்வாராவை இந்தியா குறிவைத்ததாக பாகிஸ்தான் தவறான தகவலைப் பரப்பியது. இது மற்றொரு அப்பட்டமான பொய். வகுப்புவாத மோதலை உருவாக்கும் நோக்கத்துடன் இத்தகைய வகுப்புவாத சாயலை சேர்க்க பாகிஸ்தான் தீவிரமாக முயற்சிக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
 
இந்தியா - பாக். போர் பதற்றம் பின்னணி: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கொடூரமான இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக புதன்கிழமை நள்ளிரவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்திய ராணுவம். அதன் தொடர்ச்சியாக, இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டருகே உள்ள எல்லை கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
 
இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து வியாழக்கிழமை பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. அதன் தொடர்ச்சியாக இரவிலும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது இந்திய பாதுகாப்புப் படை. எல்லையோர மாநிலங்களில் தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது. ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள எல்லை கிராமங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு அமலாகியுள்ளது. இதுபோல், தலைநகர் டெல்லியிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.



Share this:

India

India

Malaysia

Srilanka

Srilanka

Vietnam

Srilanka

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies