அணு ஆயுதம் தயாரிக்கும் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பான பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஈரானுக்கு அந்த நாள் மிகமோசமான நாளாக அமையும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இப்படியான சூழலில் தான் ரஷ்யா - ஈரான் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்துக்கு ரஷ்யாவின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்த ஒப்பந்தம் என்ன? இதன்மூலம் அமெரிக்காவுக்கு எப்படி பிரச்சனை ஏற்படும்? என்பது பற்றிய விபரம் வருமாறு: அமெரிக்காவும், ஈரானும் நீண்டகாலமாக எதிரி நாடுகளாக உள்ளன. சர்வதேச அளவில் இருநாடுகளும் எலியும், பூனையுமாக உள்ளன. இப்போது டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகி உள்ளார். இவர் ஈரானை உக்கிரமாக எதிர்க்க கூடியவர்.
இதனால் ஈரானுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் தங்கள் நாட்டை தாக்கலாம் என்று ஈரான் தலைவர்கள் நம்புகின்றனர். இதற்கு முக்கிய காரணம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக முதல் முறையாக பதவி வகித்தபோது செய்த செயல்கள் தான்.
டொனால்ட் டிரம்ப் 2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை அமெரிக்க அதிபராக இருந்தார். இந்த வேளையில் முந்தைய அதிபர் பராக் ஒபாமா - ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்தார். ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். 2020 ஜனவரியில் ஈரானின் வெளிநாட்டு பயங்கரவாத எதிர்ப்பு படை பிரிவின் தலைவராக இருந்த ஜெனரல் காசிம் சுலைமானியை, டிரம்ப் கொன்றார். இதனால் இப்போதும் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று அந்த நாட்டு தலைவர்கள்
நினைக்கின்றனர். இதன் காரணமாக ஈரான் தொடர்ந்து தனது படை பலத்தை வலுப்படுத்தி வருகிறது. குறிப்பாக அணுஆயுதம் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அணுஆயுதம் தயாரிப்புக்கு டிரம்ப் எதிர்ப்புதெரிவித்துள்ளார். ஈரான் அணுசக்தி திட்டம் என்ற பெயரில் அணுஆயுதம் தயாரிக்க கூடாது. இதுதொடர்பாக அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு ஈரான் தொடக்கத்தில் மறுத்தது. இப்போது இதுதொடர்பாக இருநாட்டை சேர்ந்தவர்களும் வரும் 12ம் தேதி ஓமனில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின்போது ஈரான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஈரானுக்கு அந்த நாள் மோசமான நாளாக மாறிவிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை செய்துள்ளார். அதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஏதுவாக 50 ஆயிரம் அமெரிக்க படை வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அதோடு போர் விமானங்களும் அமெரிக்க படை தளங்களில் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. இப்படி ஈரானை, அமெரிக்கா மிரட்டி வரும் சூழலில் தான் முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது ரஷ்யா - ஈரான் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவும், ஈரானும் நட்பு நாடுகளாக உள்ளன. இப்படியான சூழலில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆகியோர் இடையே கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்பது இருநாடுகளின் பாதுகாப்பு துறையில் இணைந்து செயல்படுவது தான். அதோடு ரஷ்யா - ஈரான் இடையேயான பொருளாதாரம், அரசியல் ரீதியான உறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட சாராம்சங்களையும் கொண்டுள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால் அடுத்த 20 ஆண்டுகள் ஈரான் -
ரஷ்யா ஆகியவை கூட்டாக சேர்ந்து ராணுவ உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலை சமாளிப்பது, ஒன்றாக சேர்ந்து ராணுவ பயிற்சி மேற்கொள்ளவது உள்ளிட்டவையும் அடங்கும். இந்த ஒப்பந்தத்துக்கு ரஷ்யா நாடாளுமன்றத்தின் கீழ் சபை என அழைக்கப்படும் ஸ்டேட் டூமா ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் வரும் நாட்களில் ஈரான் - ரஷ்யா ஆகியவை ராணுவ துறையில் சேர்ந்து செயல்பட உள்ளன.
தரைமட்டமாகும் அமெரிக்க ராணுவ தளங்கள்? ஈரானின் ஏவுகணைகள் என்னென்ன தெரியுமா? பரபரப்பு தகவல் தற்போது ஈரானுக்கு, அமெரிக்காவால் பெரும் அச்சுறுத்தல் என்பது உள்ளது. இப்படியான சூழலில் தான் ரஷ்யா - ஈரான் இடையே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் ரஷ்யாவும், ஈரானும் நட்பு நாடுகளாக உள்ளன. இந்த இருநாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பகை என்பது உள்ளது. ஈரான், ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இப்போது டொனால்ட் டிரம்ப் ஓரளவு ரஷ்யாவை நெருங்கி செல்கிறார். ஆனாலும் ரஷ்யா, அமெரிக்காவை ஒருபோதும் நம்பாது என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.
ஈரானுக்கே ஸ்கெட்ச்சா! அமெரிக்க விமானங்கள் பறக்க தடை.. சவூதி உள்ளிட்ட 4 அரபு நாடுகள் அதிரடி அறிவிப்பு இப்படியான சூழலில் ரஷ்யா - ஈரான் இடையேயான ராணுவ ஒப்பந்தம் என்பது அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அமெரிக்கா, ஈரானை தாக்கும்பட்சத்தில் ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்யலாம். இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கு பிரச்சனை என்பது ஏற்படும். மேலும் ஏற்கனவே ஈரானை தாக்க தங்களின் வான்வெளி பரப்புகளை பயன்படுத்த சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு அனுமதி வழங்காது என்று அறிவித்துள்ளது. இப்படியான சூழலில் அமெரிக்கா தாக்கும்போது ஈரானுக்கு ரஷ்யா ராணுவ உதவிகளை வழங்கும்போது அது டொனால்ட் டிரம்ப்புக்கு கூடுதல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
ஈரான் மீது சனிக்கிழமை வீசப்படும் வெடிகுண்டு? டிரம்ப் கொடுத்த கடும் வார்னிங்.. தயாரான அமெரிக்க டீம் மேலும் அமெரிக்காவுக்கு எதிராகவும், ஈரானுக்கும் ஆதரவாகவும் ரஷ்யா இப்படி செயல்படுவது ஒன்றும் புதிது அல்ல. சமீபத்தில் ஏமனில் செயல்படும் ஹவுதிகள் மீது அமெரிக்கர் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த ஹவுதி அமைப்பினர் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றன. ஹவுதிகளுடனான தொடர்பை ஈரான் துண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்து இந்த தாக்குதலை மேற்கொண்டது.
அந்த சமயத்தில் ரஷ்யா தலையீடு செய்தது. ஹவுதிகள் மீதான தாக்குதலை உடனடியாக அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று கூறியது. இப்படி ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள் மீதான தாக்குதலுக்கே ரஷ்யா குரல் கொடுத்த நிலையில் இப்போதைய ஒப்பந்தம் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசினால் நிச்சயம் ரஷ்யா வேடிக்கை பார்க்காது. ஈரானுக்கு உதவி செய்ய களமிறங்கும் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.