தைவான்இந்தோனேசியாநாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவு
09 Apr,2025
தைபே: தைவான் நாட்டில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் தலைநகரில் எச்சரிக்கை மணியை எழுப்பினர். அந்நாட்டின் வடகிழக்கு கடற்கரை நகரான இலன் நகரில் இருந்து தென்கிழக்கே சுமார் 21 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் 69 கிலோமீட்டர் (43 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சில விநாடிகள் அதிர்ந்தது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவு
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.