காங்கோவில் பயங்கரவாத தாக்குதலில் 55 பேர் பலி
12 Feb,2025
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 55 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
அத்தோடு, காங்கோவில் பல்வேறு பயங்கரவாத குழுக்களும் செயல்பட்டு வருகின்ற நிலையில், பயங்கரவாத குழுக்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீதும் பாதுகாப்புப்படையினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்ற நிலையில் நிலம் மற்றும் சுரங்களை கைப்பற்றும் நோக்கில் கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.