ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்
19 Dec,2024
மத அவமதிப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு , பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள்து.
இன்று (19) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாததால் அவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (19) அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியாது என ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.