இலங்கையின் அடுத்த சபாநாயகர் யார் ?

13 Dec,2024
 

 
 
 
திவிநெகும சட்டமூலம் தொடர்பில் எழுந்த சர்ச்சையால், மஹிந்த ஆட்சியின்போது பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டார நாயக்க குற்றப் பிரேரணைமூலம் பதவி நீக்கப்பட்டார்.
 
இவ் விடயத்தில் அப்போதைய சபாநாயகராக செயற்பட்ட சமல் ராஜபக்ச முன்னின்று செயற்பட்டார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே அவரது நகர்வுகள் அமைந்திருந்தன.
 
 
கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது சபாநாயகராக பதவி வகித்த மஹிந்த யாப்பா அபேவர்தன, தனது அலுவலகத்தை குடும்ப உறுப்பினர்கள் மூலம் நிரப்பினார்.
 
ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே சபையில் செயற்பட்டார். நிறைவேற்று அதிகாரத்துக்கு எப்போதும் கட்டுப்பட்டவராகவே இருந்தார்.
 
ரணில் ஜனாதிபதியான பின்னர்கூட அரசமைப்பு பேரவையை நிறைவேற்று துறையின் ஒரு கிளையாக மாற்றும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்கூட அவர் எதிர்கொண்டிருந்தார்.
 
 
ஆனால் சபாநாயகர் பதவிக்கு அசோக ரன்வல நியமிக்கப்பட்டு, ஒரு மாதம்கூட செல்லவில்லை. அவரின் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சையால் அவர் தாமாகவே முன்வந்து பதவி விலகியுள்ளார்.
 
சபாநாயகர் பதவிக்கு கலாநிதி பட்டம் அவசியமில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தாலே போதும். மேலும், அவர் கல்வித்தகைமை அற்றவர் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. இருப்பினும், உரிய சான்றிதல்களை முன்வைக்க முடியாத காரணத்தால் அவர் பதவி துறந்துள்ளார்.
 
"கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும், தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
 
எனக்கு முனைவர் பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்." - எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
 
தான் தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என்பது உறுதியாகாதபோதிலும் சபாநாயகர் பதவியின் முக்கியத்துவம் கருதி அசோக ரன்வல இராஜினாமா செய்துள்ளமை சிறந்த முன்னுதாரணமாகும்.
 
சிலவேளை அவர் போலியான தகவல்களை வழங்கி இருந்தால் எம்.பி. பதவியையும் இராஜினாமா செய்வதே பொருத்தமான நடவடிக்கையாக அமையும்.
 
மேற்குலக நாடுகளில் விபத்து ஏற்பட்டால்கூட போக்குவரத்து அமைச்சர்கள் பதவி விலகும் சூழ்நிலையில், இலங்கையில் பதவிகளில் இருந்து விரட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் வரவேண்டும். அவ்வாறு இல்லாமல் பதவி விலகி புதிய அரசியல் கலாசாரத்துக்கு சபாநாயகர் வழிவகுத்துள்ளார்.
 
அடுத்த சபாநாயகர்
 
தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற்ற பின்னர் நிஹால் கலப்பதியை அப்பதவிக்கு கொண்டுவருவதே ஜே.வி.பியின் திட்டமாக இருந்திருக்கக்கூடும். அதனால்தான் அவருக்கு அமைச்சு பதவிகூட வழங்கப்படவில்லை.
 
அவ்வாறு இல்லாவிட்டால் தென்மாகாண முதல்வர் வேட்பாளராக அவரை களமிறக்கும் உத்தேசமும் இருந்தது. தற்போது நிஹால் கலப்பதி அடுத்த சபாநாயகராக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக நபரொருவர் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.



Share this:

Thailand

Malaysia

Dubai

Bali

Srilanka

Dubai

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies