போலந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பம்
05 Jan,2024
போலந்து நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவையானது இன்று(05.01.2024) முதல் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த விமான சேவையை LOT நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அதன் முதலாவது விமானம் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது.
282 பயணிகளுடன் வந்த lot நிறுவனத்தின் விமானம் நீர் தாரை கொண்டு வரவேற்கப்பட்டதுடன் பயணிகளும் வரவேற்கப்பட்டுள்ளனர்.