இலங்கையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம், கொரோனாவால் உயிரிழந்த பெண்!
28 Dec,2023
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பல்வேறு நோய்களினால் அவதிப்பட்டு வந்த குறித்த பெண், சுவாச கோளாறு காரணமாக சமீபத்தில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த பெண்ணின் உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது, இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
65 வயதுடைய குறித்த பெண்ணுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உறவினர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் சமீபத்தில் பதிவான முதலாவது மரணம் இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது