சட்டவிரோதமாக பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றவர்கைது !
24 Dec,2022
சீஷெல்ஸில் பணிக்கு செல்வதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்து விட்டு, பெண் ஒருவரை சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக அழைத்துச் செல்ல முயன்ற முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த முகவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அமைச்சர் மனுஷ நாணயக்கார உத்தரவு
இதனையடுத்து , சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மகேந்திர குமாரசிங்கவுக்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பெண் ஒருவர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்குச் சென்றபோது, விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் அவரது பதிவைச் சரிபார்த்தனர்.
வேலை விசாவும், ஓமானுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாவும்
இதன்போது சீஷெல்ஸுக்கு வழங்கப்பட்ட வேலை விசாவும், ஓமானுக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசாவும் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன் தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்யப்பட்ட விசாவில் பதிவு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப் பெண் சுற்றுலா விசாவில் ஓமானுக்கு செல்ல திட்டமிட்டிருந்தமை தெரியவந்ததையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் கைதான , முகவர் நிறுவன உரிமையாளரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.